Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புரட்டாசி சனி போற்றி தெளிவாக எழுதுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கெட்டவனை திருத்தும் வழி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2017
05:09

சிறு வயதில் கெட்டவர்களாக இருப்பவர்கள் காலம் முழுவதும் அப்படியே இருந்து விடுவதில்லை. கணநேரத்தில் மனம் மாறிப் போகிறவர்கள் இருக்கிறார்கள். புகை பிடிப்பவர், குடிகாரன், கொலைகாரன் கூட திருந்துகிறான். ஜெபம் செய்வதே இதற்கு காரணம். இங்கிலாந்தில் வசித்த ஜார்ஜ் முல்லர் என்ற வாலிபர் சிறு வயதில் கெட்டுத் திரிந்தார். இதனால், நிற்கக்கூட முடியாத அளவுக்கு தளர்ந்து போனார். டாக்டர்களும் கைவிட்டனர். ஒருநாள், அவர் ஜெபக்கூட்டம் ஒன்றுக்கு சென்றார். அங்கே பேசியவர், நீங்கள் ஜெபம் பண்ணும் போது, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள்; அப்பொழுது அவைகளைப் பெற்றுக் கொள்வீர்கள், என்று, பைபிளை மேற்கோள் காட்டி பேசினார். இதன் பொருள், ஆண்டவரை மனதார வணங்குபவர்கள் கேட்கும் கோரிக்கை
நிச்சயமாக நிறைவேற்றப்படும், என்பதாகும்.

ஜார்ஜ் முல்லரை அந்த வசனம் பெரிதும் கவர்ந்தது. அவர் ஆண்டவரிடம், ஆண்டவரே! நான் இதுவரை துஷ்டனாகத் திரிந்தேன். அதன் பலனை அனுபவிக்கிறேன். இனி நீர் விதித்த சட்ட திட்டங்களை மீற மாட்டேன். என்னை குணமாக்கும்,” எனக் கண்ணீர் விட்டார். கெட்ட வழக்கங்களை கைவிட்டார். ஆண்டவரின் சிந்தனையிலேயே இருந்தார். அவரது விசுவாசம் ஆண்டவரைக் கவர்ந்தது. அவர் குணமானார். கடவுளை விசுவாசிக்கும் எல்லாருக்குமே இது கிடைக்கும்...சரியா? உயிர் விட்ட ஆட்டுக்குட்டி இயேசுநாதர் உலகிற்கு வந்த மேய்ப்பர். இவர் ஆட்டுக்குட்டிகளான மக்களை நல்வழிப்படுத்தியவர். நமக்காக பாவங்களைச் சுமந்த அவருக்கு தினமும் நன்றி சொல்ல வேண்டும். லண்டனிலுள்ள ஒரு சர்ச் வாசலில் ஆட்டுக் குட்டியின் படம் வரையப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இயேசு மேய்ப்பராக இருந்தார் என்பதற்காக அல்ல. அந்த தேவாலயம் கட்டும் போது, ஒரு தொழிலாளி மேலேயிருந்து கீழே விழுந்து விட்டார். அவர் இறந்திருப்பார் என்று கருதி சக தொழிலாளர்கள் ஓடினர்.  ஆனால், அவர் விழுந்ததோ கீழே படுத்திருந்த ஆட்டுக்குட்டியின் மீது. ஆனால், அந்தக்குட்டி இவரது எடையை முழுவதுமாகத் தாங்கி, தன் உயிரை விட்டிருந்தது. அந்த ஆட்டுக் குட்டியை நன்றியுடன் பார்த்த அந்த தொழிலாளி அதன் படத்தை தேவாலய சுவரில் அழகோவியமாக தீட்டி, தன் நன்றியை உறுதிப்படுத்தினார். நாமும் ஆட்டுக்குட்டிகளின் மேய்ப்பரான இயேசுவிற்கு, நம் பாவங்களைச் சுமந்ததற்காக தினமும் நன்றி சொல்ல வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* சிவபெருமான் தன் இடப்பாகத்தை பார்வதிக்கு அளித்த தலம் திருவண்ணாமலை.  * கார்த்திகை தீபத்தன்று ... மேலும்
 

சூரியனை சுட்டவர் டிசம்பர் 03,2025

திருவண்ணாமலையை வலம் வருவது குறித்து தேவர்கள் பெருமையாகப் பேசினர். ஆனால் சூரியபகவான் ... மேலும்
 

சிவனும் முருகனே டிசம்பர் 03,2025

யாராலும் அணுக முடியாத மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிய முடியாத பரம்பொருள் சிவபெருமான். ஆனால் பக்தர்கள் ... மேலும்
 
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கம்பத்து இளையனார் சன்னதிக்குத் தெற்கே சிவகங்கை தீர்த்தம், ... மேலும்
 
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் திருவிழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவும் ராஜேந்திரச்சோழன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar