பதிவு செய்த நாள்
19
செப்
2017
11:09
மதுரை: மதுரை அழகர்கோவில் சோலைமலை மண்டபம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,20 ல் துவங்கி அக்.,26 வரை நடக்கிறது.அக்.20: காலை 9:15 மணி விக்னேஸ்வர பூஜை. யாகசாலை பூஜைகள் துவக்கம். காலை 10:00 மணி மகா அபிஷேகம், அன்னவாகனம். மதியம் 2:30 மணி சண்முகார்ச்சனை, சந்தன அலங்காரம், தேவசேனாபதி நக்கீரர் திருமுருகாற்றுப்படை அருளச்செய்த வரலாறு. அக்.21: காலை 9:00 மணி மகா அபிஷேகம், சுவாமி புறப்பாடு - காமதேனு வாகனம், மாலை 6:00 மணி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் தங்கரத உலா.அக்.22: காலை 9:00 மணி சுவாமி புறப்பாடு - யானை வாகனம், மதியம் 2:30 மணி திருஆவினன்குடி வரலாறு.
அக்.23: காலை 9:00 மணி சுவாமி புறப்பாடு - ஆட்டுக்கிடா வாகனம், மதியம் 2:30 மணி தந்தைக்கு பிரணவ மந்திரம் உபதேசித்தல்.
அக்.24: காலை காலை 9:00 மணி சுவாமி புறப்பாடு - சப்பரம் வாகனம், மதியம் 2:30 மணி வள்ளியை கஜமுகனிடம் சேர்த்தல்.
அக்.25: காலை 10:30 மணி சுவாமி புறப்பாடு - குதிரை வாகனம், மதியம் 3:30 மணி வேல் வாங்குதல். மாலை 4:30 மணி சுவாமி புறப்பாடு - வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி கோயிலின் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்னி திக்கில் சிங்கமுகாசூரனையும் சம்ஹாரம் செய்து தல விருட்சம் நாவல் மரத்தடியில் பத்மாசூரனை சூரசம்ஹாரம் செய்யும் காட்சி.
மாலை 6:00 மணி சஷ்டி மண்டபத்தில் சாந்தாபிஷேகம், தீபாராதனை, அவ்வைக்கு நாவற்கனி கொடுத்தல்.
அக்.26: காலை 10:15 மணி திருக்கல்யாண உற்ஸவம், காலை 11:30 மணி நித்ய உற்ஸவர் மகா அபிஷேகம், பாவாடை தரிசனம், சுவாமி புறப்பாடு - பல்லக்கு வாகனம், மாலை 4:30 மணி ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீர் உற்சவம், ஆறுபடை வீடுகளில் சந்தன அலங்காரம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை கமிஷனர் மாரிமுத்து செய்து வருகின்றனர்.