Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூரில் ஊஞ்சல் ஊற்சவம்: ... கூழமந்தலில் பித்ரு பகவானுக்கு சிறப்பு பூஜை கூழமந்தலில் பித்ரு பகவானுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை காவிரி மகா புஷ்ரம் விழா: புனித நீராடிய தமிழக முதல்வர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2017
03:09

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு பின் காவிரி மகாபுஷ்கரம் விழா கடந்த 12ம் தேதி தொடியேற்றத்துடன், தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு புனித நீராடினால் மூன்னறை கோடி தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Default Image

Next News

இவ்விழாவில் 9 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் க லந்துகொண்டு காவிரி துலாக்கட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த நீர்த்தேக்கத்தில் புனிதநீராடினர். இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை அடுத்து தமிழகஅரசு உத்தரவின் படி மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று காலை காவிரி துலாக்கட்டத்தை வந்தடைந்தது. இதனையடுத்து காலை கார் மூலம் மயிலாடுதுறைக்கு வந்த தமிழக மு தல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனி வழியாக வந்து காவிரி துலாக் கட்டத்திற்கு வந்தார். அவருக்கு புஷ்கரம் கமிட்டி சார்பில் ஒருங்கினைப்பாளர் மகாலட்சுமி மற்றும் நிர்வாகிக ள் வரவேற்றனர். பின்னர் முதல்வர் சங்கல்பம் செய்துகொண்டபின், காவிரியில் புனித நீராடினார். அவருடன் அமைச்சர்கள் ஓஎஸ். மணியன், சம்பத், எம்பி பாரதிமோகன் மற்றும் எம்எல்ஏகள் பவுன்ராஜ், ராதகிருஷ்ணன் ஆகியோரும் புனித நீராடினர். தொடர்ந்து துலாக்கட்டத்தில் நடைபெற்ற விழாவில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வ தி சுவாமிகள் காவிரி மகா புஷ்கர விழா மலரை வெளியிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெற்றுக்கொண்டார். இதனையடுத்து முதல்வர் மயிலாடுதுறையில் இருந்து நாகை புறப்பட்டார். அப்போது முதல்வரை சந்தித்த கரும்பு விவசாய சங்கத்தினர் கரும்புக்கான நிலுவைத்தொகையை வழங்கி, தடையின்றி ஆலையை இயக்ககோரி மனு அ ளித்தனர். முதல்வர் புனித நீராடியதை முன்னிட்டு துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராட தடைவிதிக்கப்பட்டிருந்தது. முதல்வர் வருகையையொட்டி ஏடிஜிபி விஜயகுமார் த லைமையில் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக காவிரி துலாக்கட்ட புஷ்கரத்தில் அமைச்சர்கள் காராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சபாநா யகர் தனபால் மற்றும் திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலர் புனித நீராடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சிதம்பரம் ; கேரளா, உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பாபு சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம் அருகே பவுர்ணமிகாவு கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: மதுரை சித்திரைத்திருவிழா நிறைவுற்று கள்ளழகர் அழகர்கோவில் திரும்புவதை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபாலன் கோவிலில் விக்ரகங்கள் கிடையாது. ஒக்கலிக கவுடர் சமுதாயத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar