Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவானி காவிரி மகா புஷ்கரம் : பிரதமர் ... நத்தம் கோயில்களில் நவராத்திரி விழா நத்தம் கோயில்களில் நவராத்திரி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி விழா பொள்ளாச்சி கோவில்களில் சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
நவராத்திரி விழா பொள்ளாச்சி கோவில்களில் சிறப்பு பூஜை!

பதிவு செய்த நாள்

23 செப்
2017
12:09

பொள்ளாச்சி;பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடக்கிறது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகளும், தினமும் இரவு, 7:00 மணிக்கு, சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு மங்கள இசை, நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு, 7:00 மணிக்கு, புலவர் பிரபாகரமூர்த்தி, ’அறங்கள் - 32’ என்ற தலைப்பிலும், ’தவமும், தவப்பயனும்’ என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றுகிறார். வரும், 24 மற்றும், 25ம் தேதிகளில், ’நாம் யார்’, ’பிரசாதம்’ என்ற தலைப்பில், ராமமூர்த்தி பேசுகிறார்.வரும், 26 மற்றும் 27ம் தேதிகளில், மயிலாடுதுறை மேனாள் தருமபுரம் கலை கல்லுாரி முதல்வர் சிவசந்திரன், ’கலை மகள் வழிபாடு’, ’மலைமகள் வழிபாடு’ ஆகிய தலைப்புகளில் பேசுகிறார். தொடர்ந்து, 28 மற்றும் 29ம் தேதி பேராசிரியர் புனிதா, ’குருவே துணை’, ’திருவே துணை’ ஆகிய தலைப்புகளில், பேசுகிறார். வரும், 30ம் தேதி மாலை, 5:30 மணிக்கு நாதஸ்வர இன்னிசை நிழ்ச்சி நடக்கிறது.

பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, தினமும் மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழாவையொட்டி, கோவிலில், நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. மகாலிங்கபுரம் சச்சிதானந்த சத்குரு சாய்நாதர் ஆலயத்தில், தினமும் மாலை, 5:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதுபோன்று, பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில், ஐயப்பன்கோவில் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar