Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை பூங்கா முருகன் கோயிலில் தங்க ... மதுரை மீனாட்சி கோயிலில் வெள்ளம் புகுந்தது எப்படி:  கண்காணிப்பில் அலட்சியம் மதுரை மீனாட்சி கோயிலில் வெள்ளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தினமலர் செய்தி எதிரொலி: சேதுக்கரை கடற்கரையில் படிகள் அமைக்கும் பணி முன்னேற்றம்
எழுத்தின் அளவு:
தினமலர் செய்தி எதிரொலி: சேதுக்கரை கடற்கரையில் படிகள் அமைக்கும் பணி முன்னேற்றம்

பதிவு செய்த நாள்

06 அக்
2017
11:10

கீழக்கரை, திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை கடற்கரை மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. சேதுக்கரை கடற்கரையில் மகாளய, தை, ஆடி ஆமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு திதி, பித்ருக்களுக்கு தர்ப்பணம் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை நிறைவேற்றி விட்டு கடற்கரை முன்புறம் அமைந்துள்ள சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் கோயிலில் வழிபாடு செய்வார்கள். கடலில் நீராடுவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்த படித்துறையின் படிக்கட்டுகள் கடந்த 2014 ஆண்டு அப்புறப்படுத்தப்பட்டு, கட்டட கழிவுகளை அப்படியே பக்தர்கள் புனித நீராடும் கடற்கரையோரப்பகுதியில் கொட்டி வைத்திருந்தனர். இதனால் பக்தர்கள் கடலில் கோயிலுக்கு எதிரில் இடத்தில் நீராட முடியாமல் கிழக்குப்பகுதியில் 50 அடி துாரம் தள்ளி நீராடி வருகின்றனர். திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் இருந்து பங்குனி, சித்திரை மாதங்களில் உற்சவர் சுவாமிகளுக்கு சேதுக்கரை கடற்கரையில் தீர்த்தவாரி பூஜைகள் மற்றும் ஜீயர் சுவாமிகள், மடாதிபதிகள் உள்ளிட்டோர் நீராடுவதற்கு பெரிதும் பயன்பட்ட படித்துறை இல்லாமல் இருந்து வருவது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.

திருப்புல்லாணி யூனியன் மூலமாக ரூ. 9 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பணிகளுக்காக ஜல்லிகள், மணல் குவிக்கப்பட்டு இரண்டாண்டிற்கு மேல் ஆனது. டெண்டர் விடப்பட்டும் பணிகள் முடிக்கப்படாததால், அத்தொகை மீண்டும் அரசுக்கே சென்று விட்டது. இதுகுறித்த செய்தி கடந்த மே மாதம் தினமலர் நாளிதழில் படத்துடன் வெளியானது. சம்பவ இடத்திற்கு வந்த கலெக்டர் நடராஜன், சுற்றுலாத்துறையின் உயரதிகாரிகள் பார்வையிட்டு, பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்து திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர். துறைசார்ந்த அலுவலர் ஒருவர் கூறுகையில், பக்தர்கள் புனித நீராடுவதற்கு ஏற்ற வகையில் ரூ.25 லட்சம் செலவில் படித்துறையும், பெண்கள் உடைமாற்றும் அறை ரூ.10 லட்சத்திற்கும், யாத்ரீகர்கள் ஓய்வு அறை ரூ.27 லட்சத்திற்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தீவிரமாக நடந்து வருகிறது. கடலின் சீற்றத்தினால் படித்துறைகள் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பத்தில் சல்பேட் சிமென்ட் கலவை சேர்க்கப்படுகிறது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
சூரியனின் அருளைப் பெற ஆவணி ஞாயிறு விரதம் சிறப்பானதாகும். இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் ஆவணி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
விழுப்புரம்; பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்; நாகையில்,63 நாயன்மார்களில் ஒருவரான,அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar