பதிவு செய்த நாள்
16
அக்
2017
02:10
துணிவால் வெற்றி காணும் சிம்ம ராசி அன்பர்களே!
சூரியன், சுக்கிரன், கேது ஆகியோரால் நன்மை அதிகரிக்கும். அக். 27- க்கு பிறகு புதனும் நன்மை தருவார். மற்ற கிரகங்கள் அனைத்தும் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் பாதிப்பு உண்டாகாது. சூரியனால் செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சியில் வெற்றி உண்டாகும். பொருளாதார வளம் சிறக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.
பெண்களால் நன்மை உண்டாகும். விருந்து, விழா என சென்று மகிழ்வீர்கள். அக்.27-க்கு பிறகு பொன், பொருள் சேரும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை நிலவும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புண்டு. உடல்நிலை சீராக இருக்கும். அக்.௨௦,௨௧ல் பெண்களால் நன்மையை எதிர்பார்க்கலாம். நவ.7,8,9-ல் உறவினர் வருகையும்
அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் அக்.22,23,24ல் அவர்களது வகையில் மனக்கசப்பு வரலாம். செவ்வாயால் சிலரது வீட்டில் திருட்டு போகலாம்.நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் சூரியனால் அதிக லாபம் கிடைக்கும். தொழில் ரீதியான பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது நல்லது. கூட்டாளிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதனால் எதிரி தொல்லை, அரசு வகையில் இருந்த அனுகூலமற்ற போக்கு முதலியன அக். 27-க்கு பிறகு மறையும். வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். அக்.18,19 நவ.10,11,14,15-ல் சந்திரனால் தடைகள் குறுக்கிடலாம். அக். 27,28,29-ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
பணியாளர்களுக்கு சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பதவி உயர்வு கிடைக்கும். கடந்த காலத்தில் இருந்த வேலைப்பளு குறையும். இடமாற்ற பீதி அகலும். தனியார் துறையில் இருப்பவர்கள் சீரான வளர்ச்சி காண்பர். முயற்சி செய்தால் கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும். அவப்பெயர், மனக்கவலை, செல்வாக்கு பாதிப்பு முதலியன அக்.27-க்கு பிறகு மறையும். நவ. 5,6- சிறப்பான நாட்களாக அமையும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். நவ.2- க்கு பிறகு சக கலைஞர்களின் மத்தியில் மதிப்பு உயரும். புதிய நண்பர்களால் உதவி கிடைக்கும்.
ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். தொண்டர்களுக்காக பணம் செலவழிக்க நேரிடும். ஆனால் வருமானத்திற்கு குறைவிருக்காது. அக். 25,26- ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் மாத முற்பகுதியில் பிரச்னையை சந்திக்க நேரிடும். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும். அக்.27-க்கு பிறகு கல்வியில் சிறப்பான நிலை உண்டாகும். போட்டியில் வெற்றி கிடைக்கும்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ப மகசூல் கிடைக்கப் பெறுவர். கால்நடை வளர்ப்பவர்கள் அதிக ஆதாயம் அடைவர். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான வாய்ப்பு தள்ளிப்போகும். வழக்கு, விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் மாத முற்பகுதியில் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு சுமாராகவே இருக்கும். அக்.27-க்கு பிறகு குடும்பத்தினர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்.20,21, நவ.16ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கப் பெறலாம். அக். 30,31-
ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும்.
* நல்ல நாள்: அக்.20, 21, 27, 28, 29, 30, 31, நவ.5, 6, 7, 8, 9, 12, 13, 16
* கவன நாள்: நவ.1, 2- சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 5, 9
* நிறம்: வெள்ளை, சிவப்பு
* பரிகாரம்:
● சனியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை
● செவ்வாயன்று முருகன் கோயிலில் தீபம்
● ஞாயிறு ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு