Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பெரியகுளத்தில் பிரார்த்தனை மையம் ... மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை உற்சவம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடியும் தருவாயில் பாம்பன் விநாயகர் கோயில்
எழுத்தின் அளவு:
இடியும் தருவாயில் பாம்பன் விநாயகர் கோயில்

பதிவு செய்த நாள்

09 நவ
2017
12:11

ராமேஸ்வரம்:400 ஆண்டு பழமையான பாம்பன் பாலம் அருகே உள்ள விநாயகர் கோயில் கோபுரம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால், புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் 11ம் நுாற்றாண்டில் உருவானது. இக்கோயில் பிரகாரங்கள்,கோபுரங்களை ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் கட்டினர். இக்கோயிலில் தரிசிக்க அக்காலத்தில் பாத யாத்திரையாக வந்த பக்தர்கள், பாம்பன் கடலை கடந்து செல்ல வேண்டும். அக்காலத்தில் பாம்பன் கடல் சிறிய நதியாக இருந்ததால்,பாம்பன் வாராவத நதிஎன்றழைக்கப்பட்டது. இந்த நதியை கடந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், குதிரையில் வரும் மன்னர்கள், வீரர்கள் நதியை கடக்கும் முன் ஓய்வெடுத்து செல்ல பாம்பன் நதியின் இரு கரையிலும் சத்திரத்துடன்(தங்கும் விடுதி) கூடிய விநாயகர் கோயில் கட்டினர். இந்த விநாயகரை தரிசித்து பாம்பன் நதியை எளிதில் கடந்து செல்லலாம் எனவும், பின் ராமேஸ்வரம் கோயிலில் நீராடி சுவாமி, அம்மனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

400 ஆண்டு பழமையான பாம்பன் பாலம் விநாயகர் கோயில் தற்போது ராமநாதபுரம் சமஸ்தானத்தின் கீழ் இருந்தாலும், இக்கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பாலம் கிழக்கே உள்ள கோயில் பராமரிப்பு இன்றி கோபுரத்தில் செடிகள் முளைத்து விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. பிரசித்தி பெற்ற பாம்பன் பாலம் விநாயகர் கோயிலை புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விநாயகர் கோயில் பூஜாரி நம்புராஜன் கூறுகையில்: பக்தர்கள் அக்காலத்தில் விநாயகர் கோயில் சத்திரத்தில் ஒய்வெடுத்து, இங்குள்ள தீர்த்த கிணற்றில் நீராடிய பின் பாம்பன் நதியை கடந்து சென்றுள்ளனர். தற்போது கோயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு இடியும் தருவாயில் உள்ளதால், புதுப்பிக்க ஆன்மிக பெரியோர்கள், பக்தர்கள் முன்வர வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
மதுரை: " குருவை மறந்தவனுக்கு எப்பயனும் கிடைக்காது; அவரை வணங்கினால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும்" என ... மேலும்
 
temple news
நெகமம்: நெகமம், மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், இன்று சுவாமி திருவீதி உலா நடக்கிறது.நெகமம், ... மேலும்
 
temple news
உடுமலை: பூமிலட்சுமியம்மன் கோவில் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar