Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சரநாராயண பெருமாளுக்கு 17ம் தேதி ... தமிழக கோவில் சொத்துக்கள் வாயிலாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் குழந்தைகள் பாதுகாப்புக்கு புது முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2017
01:12

கோவை: சபரிமலை யாத்திரையின் போது, வழி தவறிபோகும் குழந்தைகளை எளிமையாக கண்டறிய, புதிய, ரேடியோ டிராக்கிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மகர விளக்கு விழா : ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவுக்கு, நாடு முழுவதிலும் இருந்து பெருந்திரளான, பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். பம்பைக்கும், சன்னிதானத்துக்கும் இடையே மலைப்பாதையில் யாத்திரை செல்லுகையில், குழந்தைகள் காணாமல் போவதாக, கேரள போலீசுக்கு அதிக புகார்கள் வருகின்றன. இதை தடுக்க முதல் முறையாக, கேரள போலீஸ் மற்றும் வோடபோன் தொலை தொடர்பு நிறுவனம் இணைந்து, ஆர்.எப்.ஐ.டி., எனும், ரேடியோ அதிர்வெண் டிராக்கிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ளும் குடும்பத்தினர், இந்த சேவையைப் பெற, பம்பையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்த ஒவ்வொரு குழந்தைக்கும், ஒரு ஆர்.எப்.ஐ.டி., அட்டை வழங்கப்படும். அதில், அந்த குழந்தையின் பெயர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், அவர்களது மொபைல் எண்கள் உள்ளிட்ட பிற விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, குழந்தைகளின் கழுத்தில் அட்டை தொங்கவிடப்படும். குழந்தைகள் கூட்டத்தில் தொலைந்து அங்குமிங்கும் சுற்றித் திரிந்தால், போலீசார், குழந்தைகளை மீட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து செல்வர்.

பிரத்யேக கருவி : ஆர்.எப்.ஐ.டி., அட்டை யில் உள்ள பிரத்யேக கருவி மூலம் பெற்றோரின் மொபைல் எண்ணுக்கு தகவல் சென்று விடும் என்பதால், குழந்தைகளை எளிதில் கண்டறியலாம்.பத்தனம்திட்டா மாவட்ட எஸ்.பி., சதீஷ் பினோகூறுகையில், குழந்தைகள் காணாமல் போனால், அவர்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பது போலீசுக்கு பெரும் சவாலாக இருந்தது.இந்த தொழில்நுட்பம் எங்கள் பணியை எளிமையாக்கியுள்ளது. இந்த சேவை மகர விளக்கு பூஜை விழா வரை தொடரும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஆனிபெருந்திருவிழா இன்று காலை ... மேலும்
 
temple news
கோவை; கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி மாதம் மூன்றாவது சோமவார ... மேலும்
 
temple news
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள, ஆதியோகி மற்றும் தியானலிங்க வளாகங்கள், ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக, நாளை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் அண்ணாமலையார் கோவில் மகா வாராஹி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar