பண்ருட்டி: பண்ருட்டி, திருவதிகை சரநாராயண பெருமாள், வரும் 17ம் தேதி, அமாவாசையை முன்னிட்டு, ஆண்டாள் ரங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவை முன்னிட்டு, அன்றைய தினம் காலை 7:00 மணிக்கு சுப்ரபாதம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை நடக்கிறது. காலை 9:00 மணிக்கு, உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மதியம் 1:00 மணிக்கு, உச்சிக்கால பூஜை, மாலை 6:00 மணிக்கு, சாயரட்சை பூஜை, இரவு 9:00 மணிக்கு, அர்த்தஜாம பூஜை நடக்கிறது.