Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் தர்ம தரிசனம்: புதிய ... பழநி திருஆவினன்குடி கோயிலில் சனிப் பெயர்ச்சி விழா பழநி திருஆவினன்குடி கோயிலில் சனிப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

19 டிச
2017
12:12

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா இன்று துவங்குகிறது.கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவிலாகும். மார்கழி மாதத்தை முன்னிட்டு, இங்கு உற்சவர் முன் ஸ்தலத்தார், அர்ச்சகர்கள் ஆகியோர் திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, சாற்றுமுறை ஆகியவற்றை சேவித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து கோ பூஜை நடைபெறுகிறது. அதிகாலையில் தாசபளஞ்சிக மகாஜன பஜனை வழிபாட்டுக்குழு, சந்தான வேணுகோபால சுவாமி பஜனைக்குழு, திருமுருக பக்தர்கள் பஜனைக்குழு ஆகிய மூன்று குழுவினர், நான்கு ரதவீதிகளில் பஜனை பாடி, இறைவனை வழிபட்டு வருகின்றனர்.

பெண்கள், சிறுவர், சிறுமியர் மார்கழி குளிரையும் பொருட்படுத்தாது, நான்கு ரதவீதிகளில் அதிகாலை கோலமிட்டு குத்துவிளக்கு ஏற்றி, பஜனை குழுவினரை வரவேற்று வருகின்றனர். இதனால் காரமடை அரங்கநாதர் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகள், காலையில் விழாக்கோலம் பூண்டுள்ளன. காரமடை கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா, இன்று திருமொழித் திருநாள் தொடக்கத்துடன் பகல் பத்து உற்சவத்துடன் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து வரும் 28ம் தேதி இரவு, 8:00 மணிக்கு அரங்கநாத பெருமாள் மோகினி அவதாரத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 29ம் தேதி காலை, 5:45 மணிக்கு வைகுண்ட ஏகாதசி எனும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்று இரவு, 10:00 மணிக்கு திருவாய் மொழித் திருநாள் எனும் ராப்பத்து உற்சவம் துவங்கிறது. ஜன., 5ம் தேதி இரவு, அரங்கநாதப்பெருமாள் குதிரை வாகனத்தில் உற்சவமும் நடக்கிறது. 7ம் தேதி இரவு 9:30 மணிக்கு விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar