Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை வரும் பெண்களிடம் வயது ... பழநிக்கு பாத யாத்திரை பக்தர்கள் இரவில் நடக்க தடை பழநிக்கு பாத யாத்திரை பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
33 கோவில் யானைகளுடன் புத்துணர்வு முகாம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
33 கோவில் யானைகளுடன் புத்துணர்வு முகாம் துவக்கம்!

பதிவு செய்த நாள்

05 ஜன
2018
11:01

மேட்டுப்பாளையம்: தமிழகத்தில் கோவில்கள் மற்றும் மடங்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கான, 10வது சிறப்பு புத்துணர்வு முகாம், கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் நேற்று துவங்கியது. இதில், 33 யானைகள் பங்கேற்றன.

தமிழக அரசு, ஆண்டுதோறும் யானைகள் சிறப்பு புத்துணர்வு முகாமைநடத்தி வருகிறது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, தேக்கம்பட்டி செல்லும் வழியில், பவானி ஆற்றின் கரையோரம் இந்தாண்டு, 10வது யானைகள் முகாமுக்கு, இந்து அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. நேற்று காலை நடந்த துவக்க விழாவில், 33 யானைகளும் அலங்காரம் செய்யப்பட்டு, கம்பீரமாக அணிவகுத்து நின்றன.
யானைகள் ஒன்றோடு ஒன்று தும்பிக்கையால் தடவி, பரஸ்பர நட்பை பகிர்ந்து கொண்டது, பார்வையாளர்களை பரவசம் அடைய செய்தது. காலை, 10:15 மணிக்கு, வனத்துறை அமைச்சர் சீனிவாசன், முகாமை துவக்கி வைத்தார். முகாம் வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர்கோவிலில், கணபதி ஹோமத்துடன் யாகம் வளர்த்து, சிறப்பு பூஜைகள்செய்யப்பட்டன. பின், யானைகளுக்கு கரும்பு, பழங்களை அமைச்சர்கள் வழங்கினர். தற்போது துவங்கியுள்ள, 10வது சிறப்பு முகாம், பிப்., 20 வரை, 48 நாட்களுக்கு நடக்கிறது. முகாமில், தமிழக கோவில் யானைகள், 26; புதுச்சேரி கோவில் யானைகள், இரண்டு, மடங்களில் உள்ள யானைகள், ஐந்து என, மொத்தம், 33 யானைகள் இடம்பெற்றுள்ளன.யானைகளுக்கு தினமும் காலை, மாலை ஆனந்த குளியல் மற்றும் நடைபயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயுர்வேத மூலிகை மருந்துகளுடன், பசுந்தீவனங்கள், பழங்கள், அஷ்டசூர்ணம் ஆகிய உணவு வகைகள் வழங்கப்பட உள்ளன. 1.17 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. கோவில் யானைகளை போல், கும்கி யானைகளுக்கும் அந்தந்த பகுதியில் வனத்துறை சார்பில் புத்துணர்வு முகாம் அமைத்து, தேவையான உணவு, மருந்துகள் வழங்கப்படும் என அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.

காட்டு யானைகளுக்கு, செக்
: காட்டு யானைகள் முகாமுக்குள் நுழையாமல் இருக்க, முகாமை சுற்றி, 5 கி.மீ.,க்கு, இரண்டடுக்கு சோலார் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆறு இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து, வனத்துறையினர் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். மேலும், முகாமுக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. முகாம் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள், கால்நடை டாக்டர்கள், கோவில் யானைகளின் நடவடிக்கையையும் கண்காணித்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று காலை நம்மாழ்வார் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் ... மேலும்
 
temple news
குன்னூர்; படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக, ஜெகதளா கிராமத்தில், ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத் தங்கத் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த அகோபில மடம் சுவாமி, முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar