Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பாதுகாப்பின்றி செல்லும் ... வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி செல்லும் பாதயாத்திரை பக்தர்களே உஷார்! தங்கம், வெள்ளி, காணிக்கை பொருட்களில் போலி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2018
12:01

பழநி : பழநியில் கிரிவீதி, அடிவாரப்பகுதியில், சிலர் அலுமினிய பொருட்களில் முலாம் பூசி வைத்து, தங்கம், வெள்ளி காணிக்கை பொருட்கள் என விற்பதால், பழநி செல்லும் பக்தர்கள் பலர் ஏமாறுகின்றனர். பழநியில் தைப்பூசம், ஐயப்ப சீசனை முன்னிட்டு, தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். அவர்களில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தங்கம், வெள்ளியிலான பொருட்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இம்மாதிரியான பக்தர்களை குறிவைத்து கிரிவீதி, அடிவாரப்பகுதியில் நடைபாதை வியாபாரிகள், சிறுகடைக்காரர்கள் தங்கம், வெள்ளியிலான குத்துவிளக்குகள், வேல், சுவாமி சிலைகள், கால், தலை, உருவம், பாதம் மற்றும் டாலர்கள், வெண்கலம், பித்தளை விளக்குகள் என பல வகையான பொருட்களை விற்கின்றனர். இதில் பெரும்பாலானவை அலுமினியத்தில் தங்கம், வெள்ளி மூலம் பூசிய தகடுகளாக போலி பொருட்களாக உள்ளன. அவை பார்ப்பதற்கு அசல் தங்கம், வெள்ளி போல பள பளவென தெரிவதாலும், விலை குறைவாக சொல்வதாலும் பக்தர்கள் நம்பி வாங்கி ஏமாறுகின்றனர்.

போலி பொருட்கள்: பழநி கோயிலில் உண்டியல் எண்ணிக்கை மாதம் ஒருமுறையும், விழாக்காலங்கள் என்றால் 15 நாட்களுக்கு ஒருமுறையும் எண்ணப் படுகிறது. அப்போது, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ள பொருட்களில் அதிகமாக காணப்படுவது இந்த போலியான தங்கம், வெள்ளி மூலம் பூசப்பட்ட அலுமினியத்திலான பொருட்களே.இவற்றை திரும்ப பயன்படுத்த முடியாததால் மூட்டைகளாக கட்டி வைக்கின்றனர். ஆகையால் பக்தர்கள் விலையை விசாரித்து, கவனமாக தரமான தங்கம், வெள்ளியில் ஆன பொருள்தானா என சரிபார்த்து வாங்க வேண்டும். இல்லையெனில் ஏமாறுவது நிச்சயம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar