பதிவு செய்த நாள்
16
ஜன
2018
01:01
ஊத்துக்கோட்டை: பெரியாயி கோவிலில், தை மாத அமாவாசை தினத்தை ஒட்டி, இன்று, ஊஞ்சல் சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ஊத்துக்கோட்டை- - பெரியபாளையம் சாலையில் உள்ளது எல்லம்பேட்டை கிராமம். இக்கிராமத்தில், சாலை ஓரம் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பெரியாயி அம்மன் கோவில். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் அமாவாசை தினத்தில் நடைபெறும் ஊஞ்சல் சேவை முக்கியமானது. அதுவும் தை மாதத்தில் வரும் அமாவாசை தினம் மிகவும் விசேஷம். இதை, தை அமாவாசை தினத்தை ஒட்டி, காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.
மாலை, 6:00 மணிக்கு, பொதுமக்கள் அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறும். பின், உடுக்கை சிலம்பு மற்றும் மங்கள வாத்தியங்களுடன் கரகம் எடுத்து வந்து, சன்னதியில் வைக்கப்படும். இதைத் தொடர்ந்து, ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடைபெறும். பின், பொதுமக்கள் தங்களது வீடுகளில் எடுத்து வரும் இறைச்சி உணவு வகைகள் அம்மனுக்கு படையலாக வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.