ராஜஸ்தானில் அஜ்மீருக்கு அருகிலுள்ள தலம் புஷ்கர். இங்கு புகழ் மிக்க பிரம்மா கோயில் உள்ளது. ஒருமுறை பூலோகத்தில் யாகம் ஒன்றை நடத்த வான்வழியே பிரம்மா வந்த போது, குறிப்பிட்ட இடத்திற்கு மேலே பறக்கும் போது, கையில் இருந்த தாமரை மலர் கீழ் நோக்கி வளைந்து பூமியை தொட்டது. அங்கே நீரூற்று உண்டானது. புஷ்பத்தால் (மலர்) உண்டானதால், தீர்த்தத்திற்கு “புஷ்கர்” என்று பெயர். யாகம் நடத்திய பிரம்மாவுக்கு புஷ்கரில் கோயில் கட்டப்பட்டது. காயத்ரி தேவியுடன் வீற்றிருக்கும் இவருக்கு வாகனமாக ஆமை உள்ளது. கோயிலுக்கு அருகிலுள்ள குன்றில், சரஸ்வதி கோயில் உள்ளது. குரு பரிகாரத் தலமான இங்கு, பிரம்மா தலைப்பாகையுடன் காட்சி தருகிறார். இங்கு வரும் பக்தர்கள் வெள்ளி காசுகளை தரையில் பதித்து செல்கின்றனர். இதனால், பிரம்மா தலையெழுத்தை நல்லதாக மாற்றுவார் என்பது நம்பிக்கை.