Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருள்நிறைந்த மரியே வாழ்க: ... ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா துறையூரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவதிகை அணைக்கட்டில் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 டிச
2011
10:12

பண்ருட்டி : பண்ருட்டி திருவதிகை அணைக்கட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை கெடிலம் நதிக்கரை அணைக்கட்டு பகுதியில், தொல்லியல் கல்வெட்டு ஆய்வாளர்கள் பண்ருட்டி தமிழரசன், நாராயணமூர்த்தி, குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் வேல்முருகன் ஆகியோர், ஆய்வு செய்தனர். அப்போது, 32 கல்வெட்டுகளை கண்டுபிடித்தனர். ஆய்வாளர் தமிழரசன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த அணைக்கட்டு 1848ம் ஆண்டில், ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டதாகும். நான்கு கண் வழிகளைக் கொண்ட இந்த அணை, செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்டுள்ளது. அணையில் கண்டுபிடிக்கப்பட்ட அத்தனை கல்வெட்டுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் காணப்படுகின்றன. கி.பி. 11ம் நூற்றாண்டில் தொடங்கி, நூற்றாண்டு வாரியாக 19ம் நூற்றாண்டு வரை சோழர், பாண்டியர், விஜயநகரத்தார் மற்றும் நாயக்க மன்னர்களின் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில், சரநாராயண பெருமாள் கோவிலுக்குரிய கல்வெட்டுகளாகும். இவற்றில், இந்த இரண்டு கோவில்களுக்கும் அரசர்கள் அளித்துள்ள நில தானங்களைப் பற்றி கூறப்பட்டுள்ளன. திருவதிகையில் சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் இருந்து கருங்கற்களைக் கொண்டு வந்து, அணை நீர் விழும் தரைப்பகுதியில் பதித்துள்ளனர். இக்கருங்கற்களில் கல்வெட்டுகள், மண்டபத் தூண்கள் சிற்பங்கள் அடங்கும். இவ்வாறு, கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar