Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலில் விடிய விடிய ... ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச விழா கோலாகலம் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேடசந்தூரில் ’நிலாப்பெண்’ திருவிழா சந்திரகிரகணத்தால் முன்னதாக நடந்தது
எழுத்தின் அளவு:
வேடசந்தூரில் ’நிலாப்பெண்’ திருவிழா சந்திரகிரகணத்தால் முன்னதாக நடந்தது

பதிவு செய்த நாள்

01 பிப்
2018
11:02

வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே தேவிநாயக்கன்பட்டியில், 11 வயது சிறுமி நிலாவுக்கு மனைவியாக கருதி கொண்டாடும் ’நிலாப்பெண்’ திருவிழா நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய நடந்தது. தேவிநாயக்கன்பட்டியில் ஆண்டுதோறும் தை மாத பவுர்ணமி நாளில் இந்தப் பாரம்பரிய திருவிழா கொண்டாடப்படுகிறது. ஊர் ஒற்றுமையை விளக்கும் விதமாக, உடல் நலம் குன்றிய, வயதுக்கு வராத இளம் பெண் ஒருவரை, தைமாத பவுர்ணமி நாளுக்கு 7 நாட்கள் முன்னதாக ஊர் பெரியவர்கள் முன்னிலையில் தேர்வு செய்வர். அவர் நலம் பெறுவதற்காக, ’நிலாப்பெண்ணாக’ அவரை அங்கீகரிக்கின்றனர்.

இந்தப் பெண்ணுக்கு ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில், ஊரில் உள்ளவர்கள் பால், பழம், கலவை சாதம் என சத்தான உணவை கொண்டுவந்து கோயிலில் வைத்து கொடுக்கின்றனர். அவ்வுணவில் ஒரு பகுதியை எடுத்து நிலாவுக்கு வைத்து வணங்குகின்றனர். இந்தாண்டு தண்டபாணி, -நித்யா தம்பதியரின் மகள் கல்பனாதேவி,11, நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஒட்டன்சத்திரம் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கிறார்.
நேற்றுதான் பவுர்ணமி நாள். நேற்று சந்திரகிரகணம் என்பதால், இந்தாண்டு விழாவை ஒருநாள் முன்கூட்டியே நடத்தினர். வானில் நிலவு தெரிந்தவுடன், அங்குள்ள மாசடச்சியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க, சரளைமேடு எல்லைக்கு நிலாப்பெண்ணை ஊர்வலமாக அழைத்து சென்றனர். அங்கு உட்கார வைத்து தலையில் ஆவாரம் பூ சூடினர். ஆவாரம் பூ மாலையிட்டு, கூடை நிறைய ஆவாரம்பூவை சுமக்கச்செய்து மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து சென்றனர்.

மாரியம்மன் கோயில் முன்பு உட்கார வைத்து, பெண்கள் பாட்டுப்பாடி கும்மியடித்தனர். பின் அருகில் உள்ள, விநாயகர் கோயிலில் சுவாமி கும்பிட்டு, நிலாப்பெண்ணை மீண்டும் மாசடச்சியம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரது தாய் மாமன்களால் கட்டப்பட்ட தென்னங்கீற்று குடிசையில் உட்கார வைத்து, பெண்கள் மீண்டும் கும்மியடித்து பாட்டுப் பாடினர். நிலா மறைய துவங்கியதும், இளம்பெண் சுமந்துவந்த ஆவாரம்பு கூடையில் மண் தீப சட்டியை வைத்து தீபம் ஏற்றினர். அதை சுமந்து சென்ற நிலாப்பெண், நீர் நிறைந்த கிணற்றில் அந்த பூக் கூடையுடன் கூடிய தீபத்தை விட்டார். அதன் பின் அனைரும் வணங்கி வீடுதிரும்பினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியையொட்டி இன்று முழுவதும் ராமேஸ்வரம் கோவில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம், இன்று ஆகஸ்ட் 4 ஆம் தேதி மரக்கன்றுகள் ... மேலும்
 
temple news
போடி; போடி சீனிவாசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஆக. 21 ல் நடைபெற உள்ள நிலையில் இன்று கோயிலில் ... மேலும்
 
temple news
கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோவிலில், ஆடிப்பெருக்கு விழா முன்னிட்டு, கோவிந்தா... ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar