திருத்தணி:திருத்தணி அடுத்த, கார்த்திகேயபுரம் கிராமத்தில் உள்ள சிவானந்த சுவாமி கோவிலில், 54ம் ஆண்டு விழா சிறப்பு ஜபத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. காலை, 6:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு பூஜை மற்றும் ஜபம் நடந்தது. காலை, 7:00 மணி முதல், காலை, 8:00 மணி வரை, சித்த வித்தியார்த்திகள் சிறப்பு ஜபம் நடத்தினர். தொடர்ந்து, ஆன்மிக சிறப்பு சொற்பொழிவுமாலை வரை நடந்தது.இந்நிகழ்ச்சியில், தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து, ௧௦௦௦-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.