Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெயிலால் தேவிபட்டினம் நவபாஷாணம் ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திடீர் ஆய்வு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பாபிஷேகத்தில் அசத்திய இஸ்லாமியர்கள் தலைவாழை இலையில் சைவ விருந்து
எழுத்தின் அளவு:
கும்பாபிஷேகத்தில் அசத்திய இஸ்லாமியர்கள் தலைவாழை இலையில் சைவ விருந்து

பதிவு செய்த நாள்

06 பிப்
2018
11:02

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு, அதே ஊரைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், சைவ விருந்து பரிமாறி அசத்தினர். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே, பழமையான சவுந்திரநாயகி, அம்பிகா சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இதற்கு, கும்பாபிஷேகம் செய்ய கிராமத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று, கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேக விழாவிற்கு நாள் குறிக்கப்பட்ட போதே, பரம்பூர் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி, கும்பாபிஷேகத்துக்கு வரும் பக்தர்களுக்கு, சிறப்பான முறையில் அன்னதானம் வழங்க வேண்டும் என, முடிவு செய்தனர்.அதன்படி, அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பக்தர்கள் வருவதற்கு வசதியாக, கோவிலுக்கு அருகிலேயே பந்தல் அமைக்கப்பட்டு, டேபிள், சேர் போடப்பட்டது. கும்பாபிஷேகம் காண வந்த பக்தர்கள் அனைவரையும் அன்புடன் அழைத்து, அனைவருக்கும் தலைவாழை இலையில், சைவ விருந்து பரிமாறப்பட்டது. இது குறித்து, அன்னதான விழா ஏற்பாடு செய்த, முகமது பாரூக் கூறியதாவது:மத நல்லிணக்கம் என்பது, நம் தமிழகத்தின் தனித்துவமான அடையாளம்.அதை வலியுறுத்தும் விதமாகவே, இந்த அன்னதான நிகழ்ச்சியை நடத்துகிறோம். 5,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உள்ளனர். எங்களுக்கு இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தியது, பெரும் மகிழ்வைத் தருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருதுநகர் ;ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் ... மேலும்
 
temple news
தென்காசி; சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை ; ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் 1 லட்சத்து 50,000 வளையல் அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துாரில் வாழ்ந்த பெரியாழ்வார் ஆடிப்பூர நன்னாளில் துளசிச்செடியின் அடியில் தெய்வக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar