ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஸ்ரீவாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோயிலில் தை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடந்தது. உலக நன்மை வேண்டி 1008 லிங்க பூஜையை வாசவி மாதர் சங்கத்தினர் நடத்தினர். ராமநாதபுரம் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள வாசவி மாதர் சங்கத்தின் சார்பில் தை வெள்ளிக்கிழமைகளில் உலக நன்மைக்காகவும், மக்கள் சுபிட்சத்திற்காகவும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தை முதல் வெள்ளிக்கிழமையில் ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இரண்டாவது வெள்ளிக்கிழமையில் இந்திய வரைபடத்தை கோலமாக வரைந்து லலிதாம்பிகை சகஸ்ர நாம பூஜை நடந்தது. மூன்றாவது வெள்ளிக்கிழமை அம்மன் ஊஞ்சல் சேவை நடந்தது. நான்காவது வெள்ளிக்கிழமையான நேற்று 1008 சகஸ்ர லிங்க பூஜைகள் நடந்தது. இதில் வாசவி மாதர் சங்கத்தினர், மற்றும் பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.