நரிக்குடி;நரிக்குடி வீரக்குடி முருகய்யனார் திருக்கோயில் மாசி மஹா சிவராத்திரி உற்ஸவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூலவர் மற்றும் முருகய்யனாருக்கு சிறப்பு பூஜை நடந்தது.இன்று முருகனுக்கு சிறப்பு அபிேஷகம், நல் வழி தீபாராதனைகள் நடைபெறும். அடுத்ததாக சுவாமி வீதி விழா வருதல், கணபதி ேஹாமம், ருத்ரா அபிேஷகம், பச்சை வாழை பரப்புதல் நடைபெறும். நாளை வள்ளி தெய்வானை சமேத கரைமேல் முருகன் சர்வ அலங்காரத்துடன் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். அமாவாசை அன்று பொங்கல், சிறப்பு அபிேஷகம், அலங்கார தீபாராதனைகள் , இரவில் உற்ஸவர் திரு உலா நிகழ்ச்சி நடைபெறும். மேலும் மாயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு அர்த்த சாம பூஜை, சிறப்பு சந்தன காப்பு அலங்காரமும், உற்ஸவருக்கு தீர்த்தவாரி நடைபெறும்.