கோவை : கோவை - திருச்சி சாலையில் சுங்கம் ரூபா நகரிலுள்ள செல்வவிநாயகர் கோவிலில் உலக நன்மைக்காக, ஆயிரத்தெட்டு கலசங்களை வைத்து எழுந்தருளச்செய்து, சிவாச்சாரியர்கள் சிறப்பு வேள்வியை நடத்தினர். மழைவேண்டியும் சிறப்பு யாகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.