Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
‘இலை” சேர்ந்தா இரு மடங்கு பூர்ணகும்ப மரியாதையின் நோக்கம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நாளெல்லாம் நல்லதாகட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2018
02:03

மகாபெரியவரிடம் சந்தேகம் கேட்கும் எண்ணத்துடன் வணங்கினாள் ஒரு பெண்.  ‘என்ன விஷயம்?”  என விசாரித்தார் சுவாமிகள். “குடும்பத்தில் பிரச்னை சுவாமி. அதெல்லாம் தீரணும்னு நிறைய ஸ்லோகம் சொல்றேன். எல்லாம் சொல்லி முடிச்சு, சாப்பிட மதியம் ஒரு மணியாகி விடும்.  இவ்வளவு ஸ்லோகம் சொல்லியும் என் பிரச்னை தீரவில்லை.  சுவாமிகள் தான் வழி காட்டணும்” என்றாள்.  அவளை கனிவுடன் பார்த்தார் சுவாமிகள். “சுலோகங்களை எப்போ எப்பிடி சொல்றேள்?” “என் வேலைகளை செஞ்சிண்டே தான் சொல்றேன்!  நிக்கறப்போ, நடக்கறப்போ, காய்கறி நறுக்கறப்போ சொல்லிண்டேயிருக்கேன்!”

“கட்டாயம் அதற்கு பலனுண்டு.  சஷ்டிக்கவசம், திருப்பாவை, விஷ்ணு சகஸ்ர நாமம், தேவாரம், திவ்யபிரபந்தம் என எத்தனையோ ஸ்லோகங்கள் தமிழ்லயும் இருக்கு. சமஸ்கிருதத்திலயும் இருக்கு.  எல்லாம் விசேஷ பலன் தரக் கூடியவை. ஸ்லோகம் சொல்லிண்டே வேலை செய்யறதும் நல்ல பழக்கம் தான்” என்று சற்று நிறுத்திய சுவாமிகள் மேலே தொடர்ந்தார்.

“இருந்தாலும் பெரிய அளவில பலன் பெற மன ஒருமைப்பாடு அவசியம். சமைக் கணும்னா அடுப்பு பக்கத்தில தானே சமைக்க முடியும்? காய்கறி நறுக்கணும்னா அரிவாள்மனை, காய்கறிகளை பக்கத்துல வெச்சுக்கணும். குளிக்கணும்னா தண்ணீர் வாளி பக்கத்துல இருக்க வேண்டாமா? பகவான் எல்லா இடத்திலும் இருக்கார்ங்கறது உண்மை தான். ஆனால் நம் மனம் எல்லா இடத்துலயும் இருக்கற பகவானை உணரக் கூடியதா இல்லியே?  மனசுல பகவான் இல்லாம வெறுமனே ஸ்லோகத்தை முணுமுணுத்தால் முழுபலன் எப்படி கிடைக்கும்? அதனால உங்களோட இஷ்ட தெய்வத்தோட படத்தின் முன் விளக்கேத்தி வச்சு,  உட்கார்ந்து ஸ்லோகம் சொல்லி பாருங்கோ. வேற நினைவில்லாம ஸ்லோகம் சொல்லிப் பழகுங்கோ.  காலையோ, சாயந்திரமோ குறிப்பிட்ட நேரம் சொல்லுங்கோ. இதெல்லாம் மனம் ஒருமுகப்படத் தான்.

இப்படி சொன்னா, பிரச்னை படிப்படியாக குறையும். வரப் போகும் நாட்களெல்லாம் நல்லதாக அமையும்” என்றார்.  எப்படி ஸ்லோகம் சொல்வது என்பதை அறிந்த பெண் மகாபெரியவரை வணங்கி விடை பெற்றாள். சுவாமிக்கு படைத்த  பிரசாதத்தை காகத்திற்கு வைக்கலாமா? முன்னோர் ஆசி பெற காகத்திற்கு உணவிடுகிறோம். சுவாமிக்கு படைத்ததை காகத்திற்கு வைக்க கூடாது. படைக்கும் முன், காகத்திற்கு தனியாக வைப்பது நல்லது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar