Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆசையை குறையுங்க பெண்களே! கோபத்தை கிளறுவதால் என்ன லாபம்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வாழ்க்கையே அலை போலே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2018
02:03

உங்கள் குழந்தைகள், மனைவி, உறவினர்கள், நண்பர்கள் யாரைச் சந்தித்தாலும், அவர்களுக்கு நாயகம் சொன்ன, “வாழ்வில் பிடிப்பு வைக்க கூடாது” என்ற அறிவுரையை சொல்ல வேண்டும்.  நிலையற்ற இந்த வாழ்க்கை பற்றி, சுனாமி போன்ற அனுபவங்களால் உணர்ந்துள்ளோம். எனினும் காலம் அவற்றை மறக்கடித்து விடுகிறது. இதோ அந்த அறிவுரைகள்.

* நீங்கள் தொழும்போது, இவ்வுலகத்தை விட்டு விடைபெற்று செல்லும் மனிதனின் மனநிலையில் தொழுங்கள்.
* ஒருவரை பற்றி பேசி விட்டு, மறுநாள் வருத்தம் தெரிவிக்கும் படியான எந்த வார்த்தையையும் பேசாதீர்கள்.
* மக்களிடம் உள்ள பொருளைக் குறித்து நிராசை அடையுங்கள். (பிறர் பொருளை கவர நினைக்காதீர்கள்)

இந்த அறிவுரைகளை கீழிருந்து மேலாகப் படித்தால் ஒரு உண்மை புரியும். பொருள் மீதான பற்றைக் குறைத்தால், தேவையில்லாத வார்த்தைகள் வராது. பேச்சு குறையும் போது, மனிதமனம் இறைவனிடம் லயிக்கும். தொழும்போது இறைவனிடம் பொருட்களை கேட்காமல் நற்கதியை கேட்கும் மனோநிலை ஏற்படும். சரி தானே! உனக்கென பிறந்தவள் பிறன்மனை நோக்குதல் என்பதை திருவள்ளுவர் எப்படி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சாடினாரோ, அதுபோல் பைபிளும் சாடியுள்ளது. ஒருவன் தன் மார்பின் மீது நெருப்பை எடுத்து வைத்தால், சட்டை தீய்ந்து போகும். நெருப்பின் மீது நடந்தால், பாதங்கள் வேகும். இதெல்லாம் எப்படி உண்மையோ, அதுபோல் மாற்றான் மனைவி மீது ஆசைப்படுபவனுக்கும் அமையும். அவன் நிச்சயம் சூடுபட்டே தீருவான். “பிறன் மனைவியோடு தொடர்பு கொள்பவன் அரக்கனுக்கு சமமாவான். அவ்வாறு செய்பவன் தன் ஆத்மாவையே அழித்துக் கொள்கிறான். அவனுக்கு புண்ணும், அவமானமும் ஏற்படும். அவன் செய்த அக்குற்றம், என்றுமே துடைத்தெறியப்படாமல் அப்படியே இருக்கும்,” என்று இயேசு சொல்கிறார். இக்கருத்தை ஏற்று, உங்களுக்கென இருக்கும் ஒருத்தியுடன் இன்பமாய் வாழுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar