மாங்கல்ய பாக்யம் நீடித்து நிலைக்க விரும்பும் பெண்கள், குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோயிலில் ஒரு கிராமம் எடை கொண்ட பொட்டுத் தாலியை வாங்கி அர்ச்சகரிடம் கொடுக்கிறார்கள். அதை அவர் அம்மன் காலில் வைத்து பூஜை செய்து நம்மிடம் திருப்பித் தந்து விடுவார். பிறகு அந்தப் பொட்டுத் தாலியை உண்டியலில் செலுத்திவிட, மாங்கல்யம் நீடித்து நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை!