Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்து கோவில்கள் அரசின் பிடியில் ... குன்றத்து கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் மாற்றம்! குன்றத்து கோயிலில் சிறப்பு தரிசன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் 5 ஆண்டுகளுக்கு பின் ஒலித்த முரசு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஜன
2012
10:01

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில் பல ஆண்டுகளுக்குப்பின் கோயில் நடை திறப்பை தெரிவிக்கும் வகையில் நேற்று முதல் மீண்டும் முரசு கொட்டும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பல நூற்றாண்டுகளாக கோயில் நடை திறப்பதை பக்தர்களுக்கு தெரிவிக்கும் வகையில் இரண்டு பெரிய முரசுகளை கொட்டுவது வழக்கத்தில் இருந்தது. தொன்று தொட்டு வந்த இந்த பழக்கம் இடையில் நிறுத்தப்பட்டது. இதனால் 300 ஆண்டுகள் பழமையான இரண்டு முரசுகளும் சேதமடைந்து மூலையில் போடப்பட்டது. கடந்த 2003ல் கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன், இரண்டு முரசுகளையும் சீர் செய்து மீண்டும் முரசுகளை ஒலிக்க செய்தார். இதுவும் இரண்டு ஆண்டிற்குள் நிறுத்தப்பட்டது. முரசு கொட்டுபவர் பணி ஓய்வு பெற்றதால் தொழில் தெரிந்த வேறு நபர் கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கம் நிறுத்தப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தற்போதைய இணை கமிஷனர் ராஜமாணிக்கம், நடவடிக்கை எடுத்தார். ஐந்து ஆண்டுகளுக்கு பின் நேற்று முதல் கோயில் நடை திறப்பின்போது முரசு கொட்டும் சேவை மீண்டும் துவங்கியது. கோயில் மிருதங்க வித்வான் முருகன், முரசு கொட்டி கோயில் நடை திறப்பை தெரிவித்தார். இணை கமிஷனர் கூறியதாவது: பழமையான முரசுகளில் ஒன்று சேதமடைந்துள்ளதால், தற்போது ஒரு முரசு மட்டும் கொட்டப்படுகிறது. வழக்கமாக அதிகாலை 4 மணி மற்றும் மதியம் 3 மணிக்கு முரசு கொட்டுவது தொடரும். தற்போது மார்கழி மாதம் ஆனதால் அதிகாலை 3 மணிக்கும், மதியம் 3 மணிக்கும் முரசு கொட்டப்படுகிறது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar