பதிவு செய்த நாள்
29
மார்
2018
12:03
பழநி: பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, பழநி திருஆவினன்குடி கோவில் அருகே, இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை மாலை தேரோட்டம் நடக்க உள்ளது.பழநி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா, மார்ச், 24 முதல் ஏப்., 2 வரை நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, இன்று இரவு திருவாவினன்குடி கோவில் அருகே, மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம் நடக்கிறது.நாளை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மலைக் கோவில், அதிகாலை, 4:00 மணிக்கு திறக்கப்படும். மாலை, 4:30 மணிக்கு கிரி வீதியில் தேரோட்டம் நடக்க உள்ளது.