Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) கொட்டப்போகுது லாபமோ லாபம்! கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு பலன் (14.4.2023 முதல் 13.4.2024 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)பொன்னும் சேருது! பொருளும் சேருது!
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)பொன்னும் சேருது! பொருளும் சேருது!

பதிவு செய்த நாள்

11 ஏப்
2018
05:04

நினைத்ததை முடிக்கும் வல்லமை பெற்ற சிம்ம ராசி அன்பர்களே!

கேது சாதகமாக இருக்கும் நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. சொத்து வாங்க யோகம் கூடி வரும். குருபகவான் ராசிக்கு 3-ம் இடமான துலாமில் இருக்கிறார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. எந்த இடையூறையும் வெல்லும் ஆற்றல் உண்டாகும். குரு 2018 அக்.5ல்  4-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போதும் அவரால் நன்மை தர இயலாது. அவர் மன உளைச்சல், வீண் பகையை உருவாக்குவார். 2019 பிப். 10ல் 5-ம் இடமான தனுசு ராசிக்கு மாறிய பின் நன்மை அதிகரிக்கும்.

ராசிக்கு 12-ம் இடமான கடகத்தில் இருப்பதால்  பொருள் விரயம் ஏற்படலாம். 2019 பிப்.13ல் அவர் இடம் மாறி 11-ம் இடமான மிதுனத்திற்கு செல்கிறார். பெண்கள்  உறுதுணையாக செயல்படுவர்.  

கேது  6-ம் இடமான மகரத்தில் இருப்பதால் செயலில் அனுகூலம் ஏற்படும். 2019 பிப்.13ல் 5-ம் இடமான தனுசு ராசிக்கு மாறுவது சிறப்பானதல்ல. சனிபகவான்  5-ம் இடமான தனுசு ராசியில் உள்ளதால் குடும்பத்தில் குழப்பம் உருவாகலாம். மனதில் இனம் புரியாத வேதனை குடிகொள்ளும். சனியின் 7-ம் இடத்து பார்வையால் நன்மை கிடைக்கும்.

2018 ஏப்ரல் – செப்டம்பர் எந்த செயலையும் முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது.  குருவின் பார்வை பலத்தால் மகிழ்ச்சி நிலைக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். உறவினர் வகையில் இருந்த கருத்துவேறுபாடு மறையும். வீடு, மனை வாங்க யோகம் உண்டு. ஆனால் சிற்சில தடைகளை கடந்த பின்னரே அனுகூலம் பிறக்கும். கேதுவால் பின்தங்கிய நிலை மறையும். பொன், பொருள் தாராளமாக கிடைக்கும்.

பணியாளர்கள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். வேலையில் பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை.  

வியாபாரிகள் சீரான வளர்ச்சி பெறுவர். யாரையும் நம்பி முக்கிய பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். அரசின் வகையில்  சலுகை எதிர்பார்க்க முடியாது.   வெளியூர் பயணம் அனுகூலம் தரும்.

கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தம் பெறலாம். அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர். எதிர்பார்த்த பதவி, புகழ் கிடைக்கும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிக்க வேண்டி யதிருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்புண்டாகும்.

விவசாயிகள் முன்னேற்ற பலன் காண்பர். நிலக்கடலை, கிழங்கு பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு, விவகார முடிவு சிறப்பாக இருக்கும்.

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.

2018 அக்டோபர் – 2019 ஏப்ரல்  வீண் அலைச்சல், மன உளைச்சல், உறவினர் பகை உருவாகலாம்.
கணவன், மனைவி இடையே மனக்கசப்பு ஏற்படலாம். 2019 பிப்.10க்கு பிறகு சமூக மதிப்பு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பெண்களின் ஆதரவால் பொன், பொருள் சேரும்.

பணியாளர்கள்  சீரான பலனை எதிர்பார்க்கலாம். வேலையில் பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.  பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடையிருக்காது. அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.  தனியார் துறையில் இருப்பவர்கள் பிப்.10க்கு பிறகு பதவி உயர்வு காண்பர்.

வியாபாரிகள் வளர்ச்சி சீராக இருக்கும். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம்.  

கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தம் கையெழுத் தாகும். சிலருக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி தேடி வரும். பிப்.13 க்கு பிறகு எதிலும் விடாமுயற்சி தேவைப்படும்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியரின் ஆலோசனையை பின்பற்றுவது நன்மை தரும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும்.  வழக்கு விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும். பிப்.13 க்கு பிறகு சுமாரான பலன் உண்டாகும்.

பெண்களால் குடும்பம் சிறக்கும். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்:
* வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
*  பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு
* வெள்ளிக்கிழமையில் லட்சுமிக்கு நெய் தீபம்

 
மேலும் தமிழ் புத்தாண்டு பலன் (14.4.2023 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி: சாதனை படைப்பீர்கள்எடுத்துக் கொண்ட செயலில் தைரியமும் தன்னம்பிக்கையும் ஆர்வமுடன் லட்சிய ... மேலும்
 
temple news
கார்த்திகை: தடைக்கல்லும் படிக்கல்லாகும்நன்றாக சிந்தித்து நல்ல யோசனைகளால் மற்றவர் மனம் நோகாமல் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உற்சாக மனப்பான்மைஉண்மையும் உழைப்பும் இரு கண்கள் என வாழ்ந்து காட்டும் மிருகசீரிட ... மேலும்
 
temple news
புனர்பூசம்: கூர்மையான தராசு என்பதற்கேற்ப புத்தி யோசனையுடனும் அதே வேளையில் கவர்ச்சியாகவும் பேசி ... மேலும்
 
temple news
மகம்: காத்திருக்கு பதவி உயர்வுநிதானமுடன் செயல்பட்டால் நினைத்ததை எல்லாம் அடைய முடியும் என இருப்பதைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar