பழநி: பழநி லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், சித்திரை திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது.பழநி மேற்குரதவீதி லட்சுமி நாராயணபெருமாள் கோயிலில் சித்ராபவுர்ணமியை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆதாரனைநடந்தது. காலை 7.15மணிக்கு லட்சுமிநாராயணப்பெருமாள் தேர்வடம்பிடிது, நான்குரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது. இரவு தங்கக்குதிரைவாகனத்தில் பெருமாள் பக்தர்களுக்கு எழுந்தருளினார். ஏப்.,30ல் (இன்று) இரவு 7 மணிக்கு சப்பரத்தில் பெருமாள் திருவுலா வருதல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) செந்தில்குமார் செய்திருந்தனர்.