விருத்தாசலம், மணவாளநல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் கோயிலில் பக்தர்கள் வேப்பெண்ணெயை வாங்கிச் சென்று அர்ச்சகரிடம் கொடுக்கிறார்கள். அதை இறைவன் பாதத்தில் வைத்து பூஜித்து, அதில் சிறிது விபூதியைக் கலந்து தருகிறார் அர்ச்சகர். உடல்நலம் பாதிப்படைந்தவர்கள், ஆறாத புண்கள் உடையவர்கள் இந்த எண்ணெயை உடம்பில் தடவிக்கொண்டால், விரைவில் குணம் கிட்டுகிறதாம்!