Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி விசாகம்: குன்றத்தில் ... ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோயிலில் தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளி ரதத்தில் களியாட்ட கண்ணாத்தாள்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
வெள்ளி ரதத்தில் களியாட்ட கண்ணாத்தாள்: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

28 மே
2018
01:05

சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி பெருவிழாவையொட்டி மூலவர் போன்ற உற்ஸவரான களியாட்ட கண்ணாத்தாள் வெள்ளி ரதத்தில் காட்சியளித்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர். விழா மே 19ல் அனுக்ஞை விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கியது. மே 20 ல் கொடியேற்றம்;  காப்புக் கட்டுதல் நடந்தன. தினமும் உற்ஸவர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவில் சிம்மம், காமதேனு, யானை, பூதம், வெள்ளி ரிஷப போன்ற வாகனங்களில்  உலா வந்தார்.  மே 26ல் தங்கரதம், அன்னவாகன புறப்பாடு நடந்தன. நேற்று காலை 8:10 மணிக்கு மூலவர் போன்று காட்சியளிக்கும் மற்றொரு உற்ஸவரான களியாட்ட கண்ணாத்தாளுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார மண்டபத்தில் அபிேஷகம் நடந்தது.  களியாட்ட கண்ணாத்தாள் இரவு வெள்ளி ரதத்தில் எழுந்தருளி, தேரோடும் வீதிகளில் வலம் வந்தார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து காட்சியளிப்பதால் பக்தர்கள் பரவசமடைந்தனர். தொடர்ந்து நள்ளிரவில் வெள்ளி குதிரை வாகன புறப்பாடு நடந்தது. இன்று காலை 9:10 மணிக்கு தேரோட்டம், இரவு புஷ்ப பல்லக்கு, மே 29  காலை பால்குடம், பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும், இரவில் வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் முயல்குத்தி திருநாள் நடக்கும். மே 30 ல் வெள்ளி ஊஞ்சல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar