Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் வர ... அமர்நாத் தரிசன யாத்திரை பலத்த பாதுகாப்புடன் துவக்கம் அமர்நாத் தரிசன யாத்திரை பலத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்காலில் மாங்கனி விழா : மாம்பழங்களை பிடித்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
காரைக்காலில் மாங்கனி விழா : மாம்பழங்களை பிடித்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2018
10:06

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில், பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. விழாவில், பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.


அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான, புனிதவதியார் என்ற காரைக்கால் அம்மையாருக்கு, புதுச்சேரி பிராந்தியமான, காரைக்காலில் கோவில் அமைந்துள்ளது. சிவபெருமான் மீது, புனிதவதியார் கொண்ட தீவிர பக்தியை விவரிக்கும் வகையில், இக்கோவிலில், ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம், காரைக்கால் அம்மையார் - பரமதத்தர் திருக்கல்யாணம் நடந்தது. மாலை, பிஷாடணமூர்த்தி வெள்ளைசாத்தி புறப்பாடு, இரவு அம்மையார் - பரமதத்தர் முத்துப்பல்லக்கில் வீதி உலா நடந்தது.நேற்று அதிகாலை பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. வேதபாராயணங்கள் மற்றும் மேளதாளம் முழங்க, காலை, 9:15 மணிக்கு, பவழக்கால் விமானத்தில் சிவபெருமான் காவியுடை, ருத்ராட்சம் தரித்து, பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதி உலா வந்தார்.அப்போது, சிவபெருமானுக்கு பக்தர்கள் மாங்கனியை வைத்து அர்ச்சனை செய்து, வழிபட்டனர். தொடர்ந்து, வீடுகளின் மாடிகளில் இருந்து, பக்தர்கள் மாங்கனி வீசும் வைபவம் நடந்தது. பக்தர்கள் இந்த மாங்கனிகளை ஆர்வத்துடன் பிடித்து, வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். விழாவில், பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத் துடன் இன்று வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 
temple news
கோவை : தை மாதம் உத்திரட்டாதி நட்சத்திரம் மற்றும் முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
திருப்பதி : திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் நடந்த ஊஞ்சல் சேவையில், ஸ்ரீ புரந்தர தாசரின் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: கூவம் ஆற்றில் 50 கற்சிலைகளை இளைஞர்கள் கண்டெடுத்து, அதிகாரிகளிடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar