Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள பஞ்சலோக சிலை மீட்பு: 4 பேர் கைது ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள பஞ்சலோக சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாமிரபரணி அம்மன் சிலை கரூர் வந்தது
எழுத்தின் அளவு:
தாமிரபரணி அம்மன் சிலை கரூர் வந்தது

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2018
12:07

கரூர்: கரூர் வந்த தாமிரபரணி அம்மன் சிலைக்கு, பக்தர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். தாமிரபரணி ஆற்றின் பெருமைகளை விளக்கும் வகையில், வரும் அக்., 11 முதல், 22 வரை, மகாபுஷ்கரம் விழா நடக்கிறது. அதற்காக, கர்நாடகா மாநிலத்தில் இருந்து, திருநெல்வேலிக்கு தாமிரபரணி அம்மன் சிலை கொண்டு செல்லப்படுகிறது. அந்த சிலை நேற்று மாலை, கரூர் சத்குரு சம்ஹார மூர்த்தி கோவிலுக்கு, அகில பாரத துறவியர் சங்கத்தினர் கொண்டு வந்தனர். பக்தர்கள் சிலைக்கு ஆரத்தி எடுத்து, மலர் தூவி வரவேற்றனர்.

* தாமிரபரணி மகாபுஷ்கரம் விழாவை, அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், என, துறவியர் சங்க செயலாளர் ராமானந்தம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், தாமிரபரணி ஆற்றை போற்றும் வகையில் மகாபுஷ்கரம் விழா நடக்கிறது. அதில், ஒரு கோடி பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். மகா புஷ்கர விழாவை, அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அதற்கு, அமைச்சர் தலைமையில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீர், கடலில் கலந்து வீணாகிறது. வருங்காலத்தில் காவிரியாற்றில், பல தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். மேலும், நீர்ப்பாசன துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும், என்றார். பிறகு, கோவிலில் பூஜை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, துறவியர் சங்கத்தினர், தாமிரபரணி சிலையுடன் திண்டுக்கல்லுக்கு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar