பெண்களுக்கு சவுகரியமான ஒரு ஆடி செவ்வாய் கிழமையில் ஒரு வீட்டில் விரதம் இருக்கும் பெண்கள் கூடுவார்கள். அதன் பின், பூஜை நடக்கும் அன்று உப்பில்லாமல் அரிசிமாவில் செய்யப்படும் கொழுக்கட்டைகளே பிரசாதம். விரதமிருக்கும் பெண்கள் மட்டுமே அதை உண்ணலாம். மறு நாள் காலையில் தான் ஆண்கள் வீட்டுக்குள் வரலாம். இந்த பூஜையை கடைப் பிடித்தால் தீர்க்க சுமங்கலித்துவம், நீங்காத செல்வம், நல்ல கணவன், குழந்தைகள் வாய்க்கும் என்பர்.