* சுயஅறிவுடன், திட்டமிட்டு செயலாற்றுபவனுக்கு எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும். * வீட்டிற்கு ஒளி தரும் விளக்கே வீட்டை எரிக்கவும் செய்யும். * தாமரையிலே உருண்டோடும் பனித்துளி போன்றது மனித வாழ்க்கை. * மண்ணிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது ஒரு மரத்திற்கு சுதந்திரம் ஆகாது. * ஆபத்திலிருந்து எதிர்கொள்ளக் கூடிய மனதை கடவுளிடம் வேண்டுங்கள். அது தான் சரியான வேண்டுதல். * கடவுளிடம் வெற்றியை மட்டும் கேட்டு உங்களை கோழையாக்கி கொள்ளாதீர்கள். * கல், மண்ணால் கட்டப்பட்ட சிறையைக் காட்டிலும் கொடுமையான சிறை, ஒரு மனிதனை இழிவாகக் கருதும் மனச்சிறை. * உண்மையான மகிழ்ச்சி என்பது, எவ்வளவு தர்மம் செய்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. * எல்லோரும் தம்மை விட்டு விட்டு, அடுத்தவரை திருத்துவதில் தான் காலத்தை வீணாக்குகிறார்கள். * கடமையும் அன்பும் ஒன்று சேரும் போது தான், அந்த அன்பு வேரூன்றி நிற்கும். * பண்பாடு என்னும் கூண்டுக்குள் நம்மை நாமே பூட்டிக்கொண்டு, நேர்மை எனும் சட்டத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் போதுதான், நாம் மனிதர் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இருக்கும். – நம்பிக்கையூட்டுகிறார் தாகூர்