Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேகம்: ... ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
படுகர் கிராமங்களில், தெவ்வப்பா திருவிழா:ஹரிக்கட்டு பூஜையில் பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2018
01:07

ஊட்டி:ஊட்டி ஏக்குணி கிராமத்தில் நடந்த தெவ்வப்பா திருவிழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஐயனை வழிபட்டனர்.நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுக சமுதாய மக்களின் குல தெய்வமான ஹிரோடைய்யா திருவிழா, கடநாடு, மடித்தொரை, ஒன்னதலை, பனஹட்டி, கக்குச்சி மற்றும் டி.மணியட்டி கிராமங்களிலும், பொரங்காடு சீமைக்கு உட்பட்ட, தாந்தநாடு தொட்டூர் கிராமத்திலும் சிறப்பாக நடந்து முடிந்தது. இக்கிராமங்களில் அமைந்துள்ள ஹிரோடைய்யா கோவில்களில் இருந்து, பக்தர்கள் சங்கொலி எழுப்பி, பனகுடி எனப்படும் வனக்கோவிலுக்கு ஊர்வலமாக சென்று, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைத்திறக்கப்படும் இக்கோவிலில், பிரம்புகளை உரசி அங்கிருந்து வெளியேறி தீப்பொறியில் நெய் தீபம் ஏற்றி சிறப்பு பூஜை நடத்தினர்.புதிதாக கன்றுக்குட்டி ஈன்ற பசுமாட்டின் பால், வனப்பகுதியில் இருந்து சேகரித்த கொம்புத்தேன் கொண்டு, ஐயனுக்கு சிறப்பு பூஜை நடத்தி, ஐயனுக்கு படையலிட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். கடந்த, 17ல் அக்க பக்க கோவிலில், ஹரிக்கட்டுதல் என்ற தானிய திருவிழா நடத்தப்பட்டது.

கோவில் கல்துாணில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி, வனப்பகுதியில் இருந்து சேகரித்துவந்த மூங்கில் நார் தழையில், தானிய வகைகளை கோர்த்து, அக்க பக்க கோவிலில் மாலையாக கட்டி, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, தொதநாடு சீமைக்கு உட்பட்ட, 12 கிராமங்கள் ஒருங்கிணைந்த துாடிகை பகுதி மக்கள் சார்பில், ஊட்டி ஏக்குணி கிராமத்தில் உள்ள அக்க பக்க கோவிலில், ஹரிக்கட்டுதல் என, அழைக்கப்படும் தானிய திருவிழா சிறப்பாக நடந்தது. கடசோலை பகுதியில் எழுந்தருளியுள்ள பாரம்பரியமிக்க மாலிங்கா கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.விழாவில், ஏக்குணி, உல்லத்தி, காரப்பிள்ளு, பிக்கட்டி, மேலுார், கவரட்டி, கடசோலை மற்றும் அத்திக்கல் உள்ளிட்ட, 12 கிராம மக்கள் கலாசார உடையணிந்து, ஐயனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவின் ஒரு பகுதியாக, நேற்று துாடிகை எனப்படும் பகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் உள்ள ஐயன் கோவில்களில் திருவிழா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar