Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொற்றாமரைக்குளம் கடம்பவனம் கடம்பவனம்
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 8. திருவிளையாடற்புராணம் சுருக்கம்
வெள்ளை யானை
எழுத்தின் அளவு:
வெள்ளை யானை

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2018
04:07

காசி நகரில் கங்கைக் கரையில் சிவலிங்கத்திற்குப் பூஜை செய்து வந்தார் துருவாச முனிவர். அவரது பக்திக்கு மகிழ்ந்தார் சிவபெருமான். தம் முடியில் உள்ள தெய்வீக மணம் கமழும் தாமரை மலரை முனிவருக்கு அருளினான் இறைவன்.இறைவன் தந்த மலருடன் தேவலோகத்திற்கு வந்தார் முனிவர். அச்சமயம் தேவேந்திரன், அசுரர்களை வென்று வெற்றி விழா கொண்டாடிக் கொண்டிருந்தான்.

அதோ! வெள்ளை யானையின் மீது ஏறி பவனி வரும் தேவேந்திரனைப் பாருங்கள்! முகத்தில் கர்வத்தின்களை; கண்களில் வெற்றியின் போதை! தேவர்கள், பவனி வரும் தங்கள் அரசனுக்குப் பற்பல பொருட்களை காணிக்கையாகத் தந்தனர். துருவாச முனிவரும் தம்மிடம் இருந்த தெய்வீக மலரைக் காணிக்கையாகத் தந்தார். வெற்றிப் போதையில் இருந்த அப்பேதை - முனிவரின் பெருமையை மறந்து தெய்வீக மலரின் அருமையை அறியாது - அதை யானையின் தலைமீது வைத்தான். தலைவனைப் போலவே வெற்றியின் கர்வத்தில் யானையும் சிக்கி இருந்தது. தன் மீதிருந்த மலரை துதிக்கையால் எடுத்துக் கீழே போட்டது. காலால் நசுக்கியது! சிதைத்தது! இதைக் கண்டதும் துருவாச முனிவர் சினம் கொண்டார்.

""பாண்டிய மன்னன் ஒருவனால் உன் ஆட்சி அழியும்! உன் வெள்ளையானை - தன் தெய்வீகத்தன்மை இழந்து காட்டுயானையாக மாறும்! என்று சாபம் தந்தார். அதன் பின்னர் தான் தன் தவறை உணர்ந்தான் இந்திரன். முனிவரின் கால்களில் விழுந்தான். மன்னிப்பு வேண்டினான். மன்னிப்பது பெரியவர்களின் குணம். முனிவரும் மன்னித்தார். ""நூறு ஆண்டு காட்டில் திரிந்தபின் வெள்ளை யானையின் சாபம் நீங்கும்! என்று விமோசனமம் தந்தார்.

சாபத்தின் வேலை தொடங்கியது. வெள்ளையானை கருப்புயானையாக மாறியது. காட்டில் அலைந்து திரிந்தது.

நூறு ஆண்டுகள் முடிந்து கொண்டிருந்தன. சாபம் நீங்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அச்சமயம்,

ஒருநாள் அந்த யானை கடம்பவனத்திற்குள் நுழைந்தது. அங்குள்ள பொற்றாமரைக் குளத்தைக் கண்டது. குளத்தையும் நீரையும் கண்டால் எந்த யானையும் விடாது. குஷி பிறந்து விடும். குளத்தில் இறங்கியது யானை! குளிக்கத் தொடங்கியது. என்னே விந்தை! மட்டரகத்துணியை வாங்கித் தண்ணீரில் போட்டால் - சாயம் தனியே வந்து நீரில் மிதக்குமே அது போல.

யானையின் கருநிறம் மறைந்தது. வெண்மை படர்ந்தது. பழைய தெய்வீக ஒளிவீசத் தொடங்கியது. நீராடி வந்த வெள்ளை யானை அங்கிருந்த லிங்கத்தைப் பொற்றாமரைகளால் அர்ச்சித்து வழிபட்டது. சோம சுந்தரரின் அருள் பெற்றது. சாபம் நீங்கியது. தேவலோகம் சென்றது. மீண்டும் தேவேந்திரனின் யானையாகத் தெய்வீகப் பொலிவுடன் வாழ்ந்து வந்தது.

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »
temple news
பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணம்அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் சுருக்கம்வேதியா வேதா கீதா ... மேலும்
 
temple news
தேவர்களின் அரசன் தேவேந்திரன். இவன் "விருத்திகாசுரன் என்ற கொடிய அரக்கனைக் கொன்றான் எனவே "பிரம்மஹத்தி ... மேலும்
 
temple news

கடம்பவனம் ஜூலை 26,2018

மதுரை தோன்றுவதற்கு முன், பாண்டிய மன்னன் "மணவூர் என்னும் ஊரைத் தலைநகரமாக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தான். ... மேலும்
 
temple news
பாண்டிய அரசன் மலயத்துவசன். இவன் சோழ மன்னனான சூரசேனின் மகள் காஞ்சனமாலையை மணந்து கொண்டான். ஆண்டுகள் பல ... மேலும்
 
temple news
அன்னை காஞ்சன மாலை வருத்தத்தில் ஆழ்ந்தாள். ஒரு தாயின் வருத்தம் ஏதாக இருக்கும்? வயதாகிக் கொண்டிருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar