முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் முளைப்பாரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2018 12:07
மானாமதுரை: மானாமதுரை கன்னார் தெரு முத்துமாரியம்மன் கோயிலில் 150 ம் ஆண்டு ஆடி பொங்கல் முளைப்பாரி உற்ஸவ விழாவை முன்னிட்டு காலை வைகை ஆற்றில் இருந்து 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும்,சிலர் அலகு குத்தியும்,பறவை காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து கோயிலுக்கு முன் பூக்குழி இறங்கி அம்மனை வழிபட்டனர். பின்னர் கோயிலில் பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்தனர். தொடர்ந்து கோயில் முன்பாக அன்னதானம் நடந்தது.இன்று மாலை 4:00 மணிக்கு முளைப்பாரி வீதிவுலா,நாளை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.