Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை கோவில்களில் கடைசி ஆடி வெள்ளி ... குன்றுவளர்ந்த பிடாரியம்மன் கோயில் திருவிழா குன்றுவளர்ந்த பிடாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் கோயில்களில் ஆடிவெள்ளிக்காக குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் கோயில்களில் ஆடிவெள்ளிக்காக குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

11 ஆக
2018
12:08

திண்டுக்கல் : திண்டுக்கல் அம்மன் கோயில்களில் ஆடிகடைசி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேர்த்திக் கடனாக பக்தர்களுக்கு கூழ்காய்ச்சி வழங்கினர். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், அபிராமி அம்மன் கோயில், செல்லாண்டி அம்மன் கோயில், ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் கோயில், பாரதிபுரம் புவனேஸ்வரி அம்மன் கோயில்ரோடு, திருச்சிரோடு தீப்பாச்சி அம்மன் கோயில் உட்பட பல்வேறு அம்மன் கோயில்களிலும் சிறப்பு அலங்காரங்களில் அம்மன் காட்சியளித்தனர். சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. பெண் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. இன்று ஆடி அமாவாசையையொட்டி இக்கோாயில்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பழநி: ஆடிமாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு, பழநி அம்மன் கோயில்களில் சிறப்புபூஜை வழிபாடுகள் நடந்தது. ஆடிவெள்ளியை முன்னிட்டு, பழநி மாரியம்மன் கோயிலில் உச்சிக்காலத்தில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பூக்கடை வியாபாரிகள் டிரஸ்ட் சார்பில், பிரித்திங்கா தேவி, சமயபுரம் மாரியம்மன் வடிவம் செய்து வழிபாடு நடந்தது. திருஆவினன்குடி கோயில் துர்க்கையம்மன், மகிசாசூரமர்த்தினியம்மன், நெய்க்காரப்பட்ட ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில்களில் கடைசி வெள்ளி நாளில் சிறப்பு வழிபாடு நடந்தது. பால், பொங்கல், கூழ் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கபட்டது. பெண்கள் நெய்தீபம், மாவிளக்கு ஏற்றி நேர்த்திகடன் செலுத்தினர்.

சின்னாளபட்டி: சின்னாளபட்டி பாலநாகம்மன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி கூழ் வழங்குவது வழக்கம். மண்பானையில் ஊற வைக்கப்பட்ட கூழ் கலயங்களுடன், சிறப்பு அபிேஷகம் நடந்தது. விசேஷ பூஜைகளுக்குப்பின், பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கல் நடந்தது. மேட்டுப்பட்டி, நடூர், தென்புதுார், கீழக்கோட்டை, ஜனதா காலனி சவுடம்மன் கோயில், செக்கடி தெரு சமயபுரம் மாரியம்மன் கோயில், ஜீவா நகர் சந்து மாரியம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar