● இரவு 9:00 மணி – அதிகாலை 4:00 மணி வரை நதிகளில் குளிப்பது கூடாது. சூரிய, சந்திர கிரகண காலத்திற்கு இந்த விதி பொருந்தாது. ● அமாவாசையன்று வெளியிடங்களில் சாப்பிடக் கூடாது. அன்று வீட்டில் அன்னதானம் செய்வது சிறப்பு. ● கோயில், வீட்டு பூஜையறையில் மட்டுமே காயத்ரி மந்திரம் ஜபிக்க வேண்டும். ● தீபாராதனையின் போது சுவாமியின் முழு உருவத்துக்கு மூன்று முறை தீபம் காண்பிக்க வேண்டும். ● பெண்கள் வீட்டில் கோலமிடாமலும், விளக்கு ஏற்றாமலும் கோயிலுக்கு செல்ல கூடாது. ● எரியும் விளக்கில் எண்ணெய்யைக் கையால் தொடுவதும், அதை தலையில் தடவிக் கொள்வதும் கூடாது. ● சிவன் – வில்வம், விஷ்ணு – துளசி, விநாயகர் – அருகம்புல், பிரம்மா – அத்தி இலை ஏற்றது. இதை மற்றவருக்கு வைக்கக்கூடாது. ● பெண்கள் வேல், சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய கூடாது. ● கோயில்களில் சூடம், தீபத்தை கைகளில் ஏற்றி சுவாமிக்கு காட்டக்கூடாது. ● நைவேத்யமாக படைத்த தேங்காயை சமையலில் சேர்த்து மீண்டும் அதை சுவாமிக்கு படைக்கக் கூடாது.