பதிவு செய்த நாள்
22
ஆக
2018
11:08
திருவள்ளூர்: திருவள்ளூர், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், மூல மந்திர ஹோமம் நடைபெற்றது.திருவள்ளூர், பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டு, விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும், மூல நட்சத்திரத்தன்று, மூல மந்திர ஹோமம் நடத்தப்படுகிறது.
நேற்று (ஆக்., 21)ல் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, கோவில் வளாகத்தில், காலை, 9:00 மணிக்கு மூல மந்திரம் ஹோமம் துவங்கியது.ஹோமம் நிறைவில், மதியம், 11:30 மணி அளவில் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.