Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேகரமாகும் எண்ணெய் கோவில்களுக்கு ... சீர்காழி விருக்ஷ ராஜ கணபதி கோயில் கும்பாபிஷேகம் சீர்காழி விருக்ஷ ராஜ கணபதி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரளயம் காத்த விநாயகருக்கு செப்.13ல் இரவு முழுவதும் தேனபிஷேகம்
எழுத்தின் அளவு:
பிரளயம் காத்த விநாயகருக்கு செப்.13ல் இரவு முழுவதும் தேனபிஷேகம்

பதிவு செய்த நாள்

31 ஆக
2018
05:08

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி கோவிலில் அருள்பாலிக்கும் தேனபிஷேக பெருமான் என்று அழைக்கப்படும்  பிரளயம் காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 13ம்தேதி  இரவு முழுவதும் தேனபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக இன்று கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது.

சோழவளநாட்டில் நால்வரால் பாடல் பெற்றதும்,வரலாற்று புகழுடையதும்,  மதுரை ஆதீனத்துக்கு சொந்தமானதாக திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை உடனாய   சாட்சிநாதசுவாமி கோவில் திகழ்கிறது.  இந்த கோவிலில் பிரளயம் காத்த விநாயகர் தனி சன்னதி கொண்டு  அருள்பாலித்து வருகிறார். இவரை தேனபிஷேக பெருமான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். ராகு அந்தர கற்பத்தில் ஏற்பட்ட பிரளயத்தில் திருப்புறம்பியம் திருத்தலத்தை கருணையால் அழியாவண்ணம் காத்தவர் பிரளயம் காத்த விநாயகர். நத்தான்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை ஆகிய கடல்  பொருட்களை தெய்வமேனியை கொண்டவராக பிரளயம் காத்த  விநாயகர் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.


வருண பகவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமே  தேனபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் அபிஷேகம் கிடையாது. விநாயகர் சதுர்த்தி திருநாளில் மாலை   தொடங்கும் தேன் அபிஷேகம்  விடிய விடிய தேனால் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம்  செய்யப்படும் தேனானது,  விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்படுவதும், அபிஷேக வேளையில் விநாயகர் செம்பவள மேனியராய் காட்சி தருவதும் இன்றும் கண்கூடாக நிகழ்ந்து வருகிறது. இவ்வாறு பல சிறப்புகள் பெற்ற பிரளயம் காத்த விநாயகருக்கு விழாக்குழுவினரால் 34 வது ஆண்டாக வருகிற 13ம்தேதி  விநாயகர் சதுர்த்தித் திருநாளான வியாழக்கிழமை  மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது.  26 ம் தேதி அதிகாலை 4.30 மணி வரை தேனபிஷேகம் நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு இன்று கோவிலில் கணபதி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துகழகம் கும்பகோணத்திலிருந்து சிறப்பு பேருந்துகளை திருப்புறம்பியத்திற்கு இயக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar