Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் இன்று ... தொண்டி அருகே  பாசிபட்டினம் தர்கா சந்தனக்கூடு திருவிழா தொண்டி அருகே பாசிபட்டினம் தர்கா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பட்டி கிராமத்தில், பெண்ணுக்கு நாகப்பாம்பு பிறக்கும் ஜோதிடர் ஆரூடத்தால் திரண்ட மக்கள்
எழுத்தின் அளவு:
மேட்டுப்பட்டி கிராமத்தில், பெண்ணுக்கு நாகப்பாம்பு பிறக்கும் ஜோதிடர் ஆரூடத்தால் திரண்ட மக்கள்

பதிவு செய்த நாள்

27 செப்
2018
12:09

கிருஷ்ணராயபுரம்: மேட்டுப்பட்டி கிராமத்தில், பூசாரி சொன்ன ஆரூடத்தை நம்பி, பெண்ணுக்கு நாகப் பாம்பு பிறக்கும் என, எதிர்பார்த்து நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கோகிலா, 42;
இவருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன், 45, என்பவருக்கும், 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது; குழந்தை இல்லை.

பக்கத்து கிராமமான வேங்காம்பட்டியில், பூசாரி ஒருவரிடம், சில மாதங்களுக்கு முன், தம்பதி வாக்கு கேட்டனர். பூசாரி, கோகிலா வயிற்றில், நாகப் பாம்பு வடிவில் குழந்தை உள்ளது. வரும் பவுர்ணமி அதிகாலை, 12.20 மணிக்கு, இவர் வயிற்றில் நாகப் பாம்பு பிறக்கப் போகிறது என, ஆரூடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, தான் கர்ப்பமாக இருப்பதாக கோகிலா நம்பியுள்ளார்.  பூசாரி சொன்ன ஆரூடம், அப்பகுதியில் காட்டுத் தீயாக பரவியது. பவுர்ணமியான, 25ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, கோகிலா வீட்டு முன், ஏராளமானோர் திரண்டனர். லாலாப்பேட்டை போலீசார் விரட்டியும், கூட்டம் கலையவில்லை. பூசாரி குறிப்பிட்ட, 12:20 மணியாகியும், கோகிலாவிடம் எந்த மாற்றமும் இல்லை.

இதனால், திரண்டிருந்த மக்கள், ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.  போலீசார், ஆம்புலன்ஸ் வரவழைத்து, கோகிலாவை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு, அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் கர்ப்பம் இல்லை என்பதை உறுதி செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar