நவராத்திரி பிரம்மோற்சவம் காண தயாராகும் திருப்பதி கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2018 02:10
திருப்பதி: திருமலையில் வருகின்ற 10ம்தேதி முதல் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. திருப்பதி திருமலையில் நடைபெறும் திருவிழாக்களிலேயே பிரம்மோற்வ விழா பிரதானமான விழாவாகும். விழா நடைபெறும் ஒன்பது நாட்களிலும் உற்சவரான மலையப்பசுவாமி பல்வேறு வாகனங்களில் காலையிலும் இரவிலும் மாடவீதிகளில் தேவியருடன் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சுவாமி வலம்வரும் போது பல்வேறு மாநில கலாச்சார குழுவினரின் நடனமும் இடம்பெறுவது கண்கொள்ளாக்காட்சியாகும். வண்ணமயமான இந்த ஆன்மீக அனுபவத்தில் ஆழ்ந்து போக நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் திரளாக வருகை தருவர். மூன்று வருடத்திற்கு ஒரு முறை இந்த பிரம்மோற்சவம் திருமலையில் இரண்டு முறை நடைபெறும். கடந்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து முடிந்த நிலையில் இப்போது நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல்:
10/10/2018 காலை இரவு பெரிய சேஷ வாகனம்
11/10/2018 காலை சின்ன சேஷ வாகனம் – இரவு ஹம்ச வாகனம்
12/10/2018 காலை சிம்ம வாகனம் – இரவு முத்து பந்தல் வாகனம்
13/10/2018 காலை கற்பகவிருட்ச வாகனம் – இரவு சர்வபூபாள வாகனம்
14/10/2018 காலை மோகினி அவதாரம் – இரவு கருட வாகனம்
15/10/2018 காலை அனுமார் வாகனம் – இரவு யானை வாகனம்
16/10/2018 காலை சூர்ய பிரபை வாகனம் – இரவு சந்திர பிரபை வாகனம்
17/10/2018 காலை தங்க ரதம் – இரவு குதிரை வாகனம்
18/10/2018 காலை சக்ர ஸ்நானம். காலை 9 மணிக்கும் இரவு 8 மணிக்கும் சுவாமியி்ன் வாகன உலா நடைபெறும்.கருட வாகன உலா மட்டும் இரவு 7 மணிக்கு துவங்கி நள்ளிரவு 12 மணிக்கு நிறைவு பெறும்.