Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரத்தில் தாமிரபரணி புஷ்கர ... உடுமலையில் மகா புஷ்கர ரதம் வருகை கோவில்களில் சிறப்பு பூஜை உடுமலையில் மகா புஷ்கர ரதம் வருகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சுரங்கப்பாதை பணியில் பழமையான கிணறு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சுரங்கப்பாதை பணியில் பழமையான கிணறு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

10 அக்
2018
11:10

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ரயில்வே சுரங்கப்பாதை தோண்டிய போது பழமையான கிணறு கண்டு பிடிக்கப்பட்டது.பண்டைய கால வணிகம் ஆற்று முகத் துவாரம், ஆறு, கடல் வழியே நடந்துள்ளது.

வியாபாரம் செய்ய ஆற்றங்கரையோரம் அதிகம் வசித்துள்ளனர். கோடை காலங்களில் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக மண்ணால் சுடப்பட்ட உறையை வைத்து கிணறுகளை பராமரித்துள்ளனர்.

கீழடியில் மொத்தம் 3 கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.தற்போது பசியாபுரம் கண்மாயில் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதை பணிதற்போது லாடனேந்தலில் இருந்து ஆலங்குளம் செல்லும் பாதையில் ஆளில்லா ரயில்வே கேட்டை அகற்றி விட்டு சுரங்கப்பாதை பணி தொடங்கியுள்ளனர்.

இதற்காக 15 அடி ஆழத்திற்கு மணல் அள்ளிய போது உறைகிணற்றை மண் அள்ளும் இயந்திர ஓட்டுனர் ராஜன் தலைமையிலான ஊழியர்கள் கண்டறிந்தனர். கீழடி அகழ்வராய்ச்சி ஊழியர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தமிழக தொல்லியல்துறை ஆணையாளர் உதயச்சந்திரன், இணை இயக்குனர் சிவானந்தம், அழகன்குளம் அகழ்வாராய்ச்சி பொறுப்பாளர் ஆசைத்தம்பி தலைமையிலான குழுவினர் லாடனேந்தலில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வாளர்கள் கூறியதாவது: கீழடி உறை கிணறு மேல்புறம் அகன்றும் கீழ்புறம் குறுகியும் உள்ளது. ஆனால் லாடனேந்தல் கிணற்றின் மேல் மற்றும் கீழ்புறம் ஒரே அளவில் உள்ளது. ஆனால் ஒன்றின் மேல் ஒன்று வைக்கும் போது அசையாமல் இருக்க மேற்புறத்திலும் கீழ்புறத்திலும் சரிவான அமைப்பு அமைக்கப் பட்டுள்ளது. இது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டதாக இருக்க வாய்ப்புள்ளது.தற்போது 10அடி உயரம் தான் தோண்டப்பட்டுள்ளது, முழுமையாக தோண்டினால் தான் கிணற்றின் அமைப்பு தெரியவரும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் ... மேலும்
 
temple news
மார்கழி மாதம் புனிதமானது. மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாள் ஒரு புண்ணிய தினம் அதை ஆருத்ரா ... மேலும்
 
temple news
சிதம்பரம்: பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் முன் முள்படுக்கையில் ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பையூர் தட்சணாமூர்த்தி கோவிலில் புத்தாண்டைய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar