பதிவு செய்த நாள்
11
அக்
2018
12:10
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவில்களில் நவராத்திரி உற்சவம் துவங்கியது.
நவராத்திரி உற்சவத்தின் முதல் நாளான நேற்று, மூலஸ்தானத்தில் திருமஞ்சனம் கண்டருளிய ரெங்கநாச்சியார் மாலை, 6:00 மணிக்கு, மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, கொலு மண்டபம் வந்தடைந்தார். அங்கு கொலு உற்சவம் துவங்கியவுடன், இரவு, 10:00 மணிக்கு மீண்டும் மூலஸ்தானம் சென்றடைந்தார். இன்று முதல், 15 வரை மற்றும், 17 அன்றும், ரெங்கநாச்சியார் கொலு மண்டபத்தில் எழுந்தருளுவார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை, வரும், 16ல் நடைபெறும். சரஸ்வதி பூஜை தினமான, 18ல், தாயார் கொலு மண்டபத்தில் எழுந்தருளி, திருமஞ்சனம் கண்டருள்கிறார். இதேபோல், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலிலும், நவராத்திரி உற்சவம் நேற்று துவங்கியது. தொடர்ந்து, 11 நாட்கள் நடைபெறும் விழாவில், அம்மன் பல்வேறு அலங்காரங்களில் கொலு மண்டபத்தில் எழுந்தருள்கிறார். விஜயதசமியான, 19 அன்று, அம்பு போடும் உற்சவத்தின் போது, சுவாமி தங்கக் குதிரை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர்.