பதிவு செய்த நாள்
11
அக்
2018
01:10
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், தினமும், பகல், 12:30 மணி வரை தரிசனம் நடைபெறும். மாலை, 4:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரை, கோவில் திறந்திருக்கும்.நேற்று துவங்கிய நவராத்திரி விழாவை முன்னிட்டு, வரும், 19ம் தேதி வரை, காலை, 10:30 மணி முதல், பகல், 12:30 வரை, ஸ்ரீசக்கரபூஜை நடைபெற உள்ளது. இதனால், மூலவரை பக்தர்கள் தரிசிக்க முடியாது. கோவில் திறந்திருக்கும்; சன்னதியை மட்டும் சுற்றி வரலாம்.இரவு, கச்சேரி முடிந்து, நவராத்திரி மண்டபத்தில் இருந்து, உற்சவர் அறைக்கு இரவு, 11:00 மணிக்கு, அம்மன் செல்லும் வரை, கோவில் நடை திறந்திருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.