Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரை திருக்கோயிற் கல்வெட்டுக்கள் மதுரைக்கூடல் அழகர்கோயில் ...
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 54. மதுரை திருக்கோயிற் கல்வெட்டுக்கள்
திருமடம்:
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2018
03:10

சத்தியஞான தரிசனிகளாகிய ஞானக்கூத்தருடைய திருமடம் ஒன்று சகம் 1469ல் அதாவது கி.பி 1547ல் இருந்ததை முதற்கோபுரத்தின் தெற்குப்புறச்சுவர் கல்வெட்டு அறிவிக்கின்றது.

அளிக்கப்பெற்ற ...................
திரிபுவனச் சக்கரவர்த்தியின் கோனேரிம்மை கொண்டார். திருவாலவாயுடைய நாயனர்க்கு திருமஞ்சனத்திற்கு கற்பூரம், கஸ்தூரி, குங்குமம், சந்தனம், பன்னீர் உட்பட வேண்டும்படி விஞ்சனத்திற்கு வேண்டும் முதலுக்கு முத்தூர் கூற்றத்து கப்பலூரான உலகளந்த சோழநல்லூர் கரியமாணிக்க ஆழ்வான் திருவுடைய நாயகரான வீரபாண்டிய காலிங்க ராயர் காணியான அண்ட நாட்டு புரவரி நல்லூரன சேத்து வாய்த்த நல்லூர் நான்குகெல்லைக்குட்பட்ட நன்செய், புன்செய், வாழைக்கொழுந்துள்ளிட்ட வான்.......... மாவடை, குளவடை, தறியிறை, செக்கிரை, தட்டொலி, தட்டிறை, தட்டாரப்பாட்டம் உட்பட அனைத்து ஆயங்களும், கடமையும், கொற்றிலக்கை, கடைக்கூட்டிடக்கை, பஞ்சுபீலி, சந்தி விக்ரப்பேறு, வாசல் வினியோகம் உட்பட அனைத்து உபாதிகளும், வரியிலும் கழித்து, ஆண்டொன்றுக்கு வாடாக்கடமையாக நாற்பது பொன் இருக்குமாறு ஏற்பாடு செய்திருந்தார். கோசடையபன்மரான திரிபுவனச்சக்ரவர்த்தி வீரபாண்டிய தேவரின் 21ம் இராச்சிய ஆண்டில் திருவாலவாய உடைய நாயனார் கோயில் பங்காளர், தேவகன்மி ஸ்ரீ மாகேஸ்வரக் கண் காணி செய்வார்கள் ஆகிய அவர்கள், திருவாலவாலவாய் உடையாரின் தேவதானம் திருநாமத்துக் காணி மாடக்குளக் கீழ் முடித்தலை கொண்டிய பாண்டியச் சதுர்வேதிமங்கலத்தின் கீழ்ப்பிடாகைமாத்து, நெடுங்காலம் வரம் பிழந்து பருமாக்காடாய் கிடந்தமையான, அதை வாது செய்த வாரணமுடைய நாயனார் கோயிலை கைச் கோளரின் மாதேவர் அழகிய சொக்கரான சுந்தரபாண்டிய சோழ கோனார்க்கு காராண்மை காணியாக அனுபவித்துக் கொள்வராக கற்பூர விலைக்கு நிச்சயித்து புதுக்குளிகை பொன் 250 பெற்று அதைக் கோயில் கருவூலத்தில் ஒடுக்கிக் கொண்டனர், மேலும் இவ்வூர்க்கு வரும் கடமை அந்த ராயம், பொன் வரி வினியோகம் வெட்டிப்பாட்டம், பஞ்சு, பீலி, சந்தி விக்ரகப் பேறு, ஓலையெழுத்து, விநியோகம் தறியிறை, செக்கிறை, தட்டொலி, தட்டாரப்பாட்டம், இடைவரி ஏரி மீன் பாட்டம், இலாஞ்சினைப் பேறுகாணிக்கை, கார்த்திகைப் பச்சை ஆனைச்சாலை பந்தி, குதிரைப்பந்தி உள்ளிட்ட எப்பேர்பட்ட இறைகளையும் கொண்டு, காட்டை வெட்டி, நிலமாக்கி, ஒரு மாவுக்கு நெல் நாற்கலமும் இதன் எதிராம் ஆண்டு மாவுக்கு நெல் ஆறுகலமும், இதன் எதிராம் ஆண்டு மாவுக்கு நெல் எண்கலமும் இதன் எதிராம் ஆண்டு மாவுக்கு, பன்னிரண்டு கலமும், இதன் எதிராமாண்டு முதல் நிலவரிசையால் மாவுக்கு நெல் பதினைந்து கலமும் ஆண்டு தோறும் பயிர் பார்த்து பயிர் நின்ற நிலத்திற்கு வரிசைப்படி, இறுக்கவும் ஏற்பாடு செய்திருந்தநர். இங்ஙன் விதிப்பிராமணம் பண்ணிக்கொடுத்த மாத்தூர்க்கு எல்லை:&

கீழெல்லை துவரமான் குளத்து நீர் நக்கலுக்கு மேற்கும், தென்னெல்லை நாகமலைக்கு வடக்கும், மேலெல்லை முடித்தலை கொண்ட பாண்டிய சதுர்வேதி மங்கலத்து தென் வடலான கீழைகண்ணாறு, சீவல்லப்பிலாற்றுக்குக் கிழக்கும், வடஎல்லை, வைகையாற்றுக்குத் தெற்கும் ஆக இப்பெரு நான்கு எல்லைக்குட்பட்டதாகும். இவைகளற்றி திருவிளக்குப்புறமாகவும் நிலங்கள் விடப்பட்டிருந்தன.

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 54. மதுரை திருக்கோயிற் கல்வெட்டுக்கள் »
1.சோமசுந்தரர் ஆலயம் இரண்டாவது சுற்றுப்புற நடுவில் எட்டடி உயரத்தில் 15 வரிகளை உடையது. அரசுக்குவரும் ... மேலும்
 
இக்கோயிலின் மண்டபத்தின் தென்புறச்சுவர் கல்வெட்டு. இக்கோயிலின் கர்ப்ப இல் அர்த்த மண்டபம் இவைகளைக் ... மேலும்
 
இக்கோயிலின் பல துண்டுக்கற்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. ஆவைகளில் மூன்று துண்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar