பழநி:பழநிமுருகன் கோயில் உண்டியலில் 16 நாட்களில் ரூ. ஒரு கோடியே 54 லட்சத்து 13ஆயிரம் வசூலாகியுள்ளது. பழநி முருகன்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. அதில் தங்கம்- 514 கிராம், வெள்ளி- 7,110 கிராம், அமெரிக்கா, மலேசியா போன்ற வெளிநாட்டு கரன்சிகள்-414,ரொக்கமாக ரூ. ஒரு கோடியே 54லட்சத்து 13ஆயிரத்து 570வசூலாகியுள்ளது. இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், உதவிஆணையர் சிவலிங்கம், வங்கிப்பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.