பதிவு செய்த நாள்
15
அக்
2018
11:10
கமுதி:கமுதி அருகே பெண் தெய்வத்தை ஆண்கள் மட்டுமே வழிபடும் விநோத திருவிழா நடந்தது.கமுதி அருகே முதல்நாடு கிராம கண்மாய் கரையில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்தில், புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டுமே பங்குபெறும் விநோத திருவிழா, ஆண்டு தோறும் நடக்கிறது. விழாவிற்கு ஒருவார காலத்திற்கு பெண்கள், கோவில் இருக்கும் பகுதிக்கு, சொந்த காரணங்களுக்காகவோ, விவசாய பணிகளுக்காகவோ அனுமதிக்க படுவதில்லை.
இத்திருவிழாவை முன்னிட்டு நேற்றிரவு (அக்.,14ல்) 150க் கும் மேற்பட்ட ஆண்கள் ஒன்று கூடி பீடம் அமைத்து, கைக்குத்தல் பச்சரிசி சாதம் செய்து, 50 செம்மறி கிடாய்கள் பலியிட்டு, சாதம் உருண்டைகளாக உருட்டப்பட்டு எல்லை பிடாரி அம்மனுக்கு படையலிட்டனர்.
பின் அம்மன் பீடத்திற்கு நேற்று (அக்.,14ல்) காலை சிறப்பு பூஜை செய்து, அம்மனுக்கு படைக்கப்பட்ட சாத உருண்டைகளை, கறி விருந்துடன் பனை ஓலையில் ஆண்களுக்கு பரிமாறப்பட்டது.
சாத உருண்டைகள் மீதமிருந்தால் கூட, கோயில் அருகே குழி தோண்டி புதைத்து செல்வது வழக்கம். ஒரு வயது முதல் வயதானவர்கள் வரை ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும்,
இத்திருவிழாவிற்கு கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு எல்லைப்பிடாரி அம்மனை வழிபட்டனர்.