Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசாணியம்மன் கோவிலில் குண்டம் விழா ... ஷீரடி சாய்பாபாவிற்கு 401 ‌கோடிரூபாய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோலியனூர் அம்மன் கோவில் குளம் சீரமைக்கப்படுமா?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 பிப்
2012
11:02

விழுப்புரம் :கோலியனூர் புத்துவாயம்மன் கோவில் குளத்தை சீரமைத்து அழகுபடுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் அருகே உள்ள கோலியனூரில் பிரசித்தி பெற்ற புத்துவாயம்மன் கோவில் உள்ளது. இதன் எதிரே கோவிலுக்குச் சொந்தமான பெரிய குளம் உள்ளது. பழமை வாய்ந்த இந்த குளத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் போது தெப்பல் உற்சவம் நடந்து வருகிறது. இந்த குளத்தைச் சுற்றிலும் கருங்கல் படிகள் அமைக்கப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.

மையத்தில் அமைந்துள்ள மண்டபத்தைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கி நின்று நீண்ட காலமாக அழகுடன் காட்சியளித்து வந்தது. தற்போது ஐந்து அடி அளவில் தண்ணீர் நிரம்பி. பாசி படிந்து ளம் வீணாகி கிடக்கிறது. குளத்தைச் சுற்றிலும் முள்செடிகள், கொடிகள் படர்ந்துள்ளது. குளம் பராமரிக்கப்படாமல் உள்ளதால், குளத்தினுள் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் சேர்ந்தும், குளக்கரையில் பலர் சூதாட்டம் ஆடியும், இரவு நேரங்களில் மது அருந்தியும் வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இந்த குளத்திற்கு மழைக்காலம் தோறும் தொடர்ந்தனூர் ஏரியில் இருந்து வரும் நீர் வரத்து வாய்க்கால் மூலம் குயிலான்குட்டை, மாரியம்மன் கோவில் குட்டைகளுக்கு வந்து மழை நீர் சேகரமாகி வருகிறது. இதற்கான நீர் வரத்து வாய்க்கால் வழியில் அடைபட்டு கிடக்கிறது. ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணிகள் நடந்தும், முழுமையாக செய்யப்படாமல் ஆங்காங்கே வாய்க்கால் தூர்ந்து கிடக்கிறது. இதனால் முழு அளவில் மழை நீர் வராததால், குளத்தின் நீர் மட்டம் குறைந்துள்ளது. கோலியனூர் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த பிரசித்தி பெற்ற கோவில் குளத்தினை பழமை மாறாமல் அழகுபடுத்திட கோவில் நிர்வாகமும், ஊராட்சி தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனருகே அமைந்துள்ள கோலியனூர் ஒன்றிய நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து கோவில் குளத்தை சீரமைத்து தண்ணீர் தேக்க வழிவகை செய்ய வேண்டுமென, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவில் குளம் சீரமைப்பதன்மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, சுற்றுப்பகுதி மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே வெள்ளைக்கிணறுவில் உள்ள பூ மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அடி அளந்து ... மேலும்
 
temple news
கருமததம்பட்டி; கே.ராயர்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவின்தேர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar